திண்டுக்கல் மாவட்டம், காளாஞ்சிபட்டியில் ரூ.10.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மையம் – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
தலைமைச் செயலகத்தில், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், காளாஞ்சிபட்டியில் 10 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மையத்தை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த படித்த ஏராளமான இளைஞர்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள தன்னார்வலர்கள் மூலம் நடைபெறும் பயிற்சி மையங்களுக்குச் சென்று, திறந்தவெளியில் போதிய அடிப்படை வசதிகளின்றி படித்து வருகின்றனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளும் வகையிலும், அதிக எண்ணிக்கையில் அரசுப் பணிகளில் தேர்ச்சி பெற்றிடும் வகையிலும், பாதுகாப்பான, காற்றோட்டமான வசதியுடன் தரமான பயிற்சியினை ஆண்டு முழுவதும் இலவசமாக வழங்கிடும் வகையிலும், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், காளஞ்சிபட்டியில் 4 ஏக்கர் பரப்பளவில் கலைஞர் நுாற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித்தேர்வு பயிற்சி மையம் அமைத்திட, 2021-22 மற்றும் 2022-23ஆம் ஆண்டுகளுக்கான “நமக்கு நாமே” திட்டம் மூலம் 7 கோடியே 65 இலட்சம் ரூபாயும், நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா அவர்களின் 2022-23ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடி ரூபாயும், நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ அவர்களின் 2022-23ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடியே 50 இலட்சம் ரூபாயும், என மொத்தம் 10 கோடியே 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இப்புதிய பயிற்சி மையத்தின் தரைதளத்தில், 5608 சதுர அடி பரப்பளவில் 2 பயிற்சி வகுப்பறைகள், பணியாளர் அறை, பயிற்றுநர் அறை, கணினி ஆய்வகம், நுாலகம், வாகனங்கள் நிறுத்துமிடம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிப்பறைகள் மற்றும் 5985 சதுர அடி பரப்பளவில் 1000 நபர்கள் அமரும் வசதி கொண்ட குளிரூட்டப்பட்ட கருத்தரங்கக்கூடமும், முதல்தளத்தில் 3896 சதுர அடி பரப்பளவில் கணினி நுாலகம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக உணவருந்தும் கூடமும் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், உட்புற சாலை வசதிகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், சுற்றுச்சுவர் மற்றும் தடுப்புச் சுவர் வசதிகள், நுழைவு வாயில், குடிநீர் வசதி, புல்வெளி மற்றும் தோட்ட அலங்கார வசதிகள் போன்ற அனைத்து வசதிகளுடன் பாதுகாப்பான சூழலில் படிக்கும் வகையில் இப்பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி மையத்தில், ஒன்றிய. மாநில அரசுத் தேர்வாணையங்களது ஆண்டுத்திட்ட நிரல்களின்படி நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளுக்கும் தேர்ந்த பயிற்றுநர்கள் மற்றும் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு ஆண்டு முழுவதும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.
தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களுக்கேற்ப ஆயிரக்கணக்கான சிறந்த பாடப்புத்தகங்கள் கொண்ட நுாலகமும், மின் நுால்கள் கொண்ட மின் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், போட்டித்தேர்வர்கள் பயன்பெறும் வகையில் முன்னணி நாளிதழ்கள், வார இதழ்கள் மற்றும் மாத இதழ்கள் பெறப்பட்டு நூலகத்தில் பராமரிக்கப்படும்.
இந்நிகழ்ச்சியில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.
காணொலிக் காட்சி வாயிலாக திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ப. வேலுச்சாமி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மொ.நா. பூங்கொடி, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..