தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் சுற்றுப்புறச் சூழ்நிலையை மேம்படுத்துதல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் நகர்ப்புர மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் நோக்கத்துடன் “நீடித்த நகர்ப்புர உட்கட்டமைப்பிற்கான நிதியுதவி-தமிழ்நாடு” எனும் திட்டம் ஜெர்மன் மேம்பாட்டு வங்கி (KfW) நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் முதல் இரண்டு நிலைகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதன் தொடர்ச்சியாக, இத்திட்டத்தின் மூன்றாம் நிலையை செயலாக்கம் செய்வதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை(நிலை) எண்.95, நாள் 12.07.2023-ல் ஆணைகள் வெளியிடப்பட்டன. நகர்ப்புர உட்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதற்காக நிதியுதவி அளிக்கும் இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.4,333.75 கோடி ஆகும்.
தமிழ்நாடு அரசின் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், நீடித்த நகர்ப்புர உட்கட்டமைப்பு நிதியுதவி-தமிழ்நாடு திட்டத்தின் மூன்றாம் நிலையின் கீழ் மதுரை, திருச்சிராப்பள்ளி, திருப்பூர் மாநகராட்சிகள் மற்றும் செங்கல்பட்டு, மறைமலைநகர், பழனி மற்றும் மயிலாடுதுறை நகராட்சிகளில் பாதாள சாக்கடைத் திட்டத்தை (UGSS) செயல்படுத்தவும், திருநெல்வேலி மாநகராட்சியில் நாளொன்றுக்கு 56 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும், மொத்தம் ரூ.1,675.69 கோடி மதிப்பீட்டில் மேற்கண்ட எட்டு உட்கட்டமைப்பு திட்டப்பணிகளை செயல்படுத்த தற்போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிட்டுள்ளார்கள்.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள திட்டங்கள் செயல்படுத்தப்படுவதன் மூலம், இந்நகர்ப்புர உள்ளாட்சிகளில் கழிவுநீரை பாதுகாப்பான முறையில் வெளியேற்றுவதற்கும், சுத்திகரிப்பதற்கும் ஏதுவாக அமைவதோடு, இந்நகரங்களின் நீடித்த சுகாதாரத்திற்கும், நீர்நிலைகளை பாதுகாக்கவும், இந்நகர மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான வாய்ப்புகளை உறுதிசெய்யவும் வழிவகுக்கும்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..