• Mon. Feb 2nd, 2026

சென்னை தியாகராயர் நகரில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்..!

Byமு.மு

Aug 9, 2024
சென்னை தியாகராயர் நகரில் வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல்

சென்னை தியாகராயர் நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை செலுத்தாத 170 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பனகல் பார்க் பகுதியில் 150 டைகளுக்கும், பாண்டி பஜாரில் 20 கடைகளுக்கும் சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 170 கடைகளில் ரூ.3.25 கோடி வாடகை பாக்கி செலுத்தாமல் நிலுவையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்த நிலையில், சென்னை தியாகராயர் நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகளில் வாடகை செலுத்தாத 170 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.