பெருமிதத்துடன் நன்றி கூறிய ஆயி அம்மாள்!
குடியரசு தின விழாவில் முதலமைச்சரின் சிறப்பு விருதுபெற்ற மதுரை ஆயி அம்மாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஆனந்தக் கண்ணீர் சிந்தி பெருமிதத்துடன் கூறிய நன்றி! மதுரை கிழக்கு ஒன்றியம். யா.கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த உ.ஆயி அம்மாள் என்ற பூரணம் அவர்கள் தான்…
சக குடிமக்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்!. முதல்வர்
நமது இந்திய ஒன்றியத்தின் அடையாளமாக விளங்கும் பன்மைத்துவம், சமத்துவம் மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் மீதான நமது உறுதிப்பாட்டினைப் புதுப்பித்துக் கொள்வோம். இந்த ஆண்டு இந்தியாவின் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் அனைவரையும் உள்ளடக்கிய நோக்கைத் தழுவி, பிரிவினைக் கொள்கைகளைத் தகர்த்தெறியட்டும்!
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசு மீது தினகரன் கண்டனம்!
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கேரள அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது – தென்மாவட்ட மக்களை வஞ்சிக்கும் கேரள அரசின் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து நிறுத்த வேண்டும். கேரள சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆளுநரின் உரையில் முல்லைப் பெரியாற்றில்…
நேரலை:வெல்லும் சனநாயகம் மாநாடு, திருச்சி 2024
https://twitter.com/thirumaofficial/status/1750817292420858037?s=20
பத்ம விபூஷன்-பத்ம பூஷன்-பத்மஸ்ரீ- விருது பெறுபவர்களுக்கு சசிகலா வாழ்த்து!
இந்திய நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாக விளங்கும் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளை ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு இந்திய அரசு வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில் 2024-ஆம்…
பத்ம பூஷன்-பத்மஸ்ரீ விருது பெறுபவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து!
தமிழ்நாட்டில் இருந்து நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷன் விருதுக்குத் தேர்வாகியுள்ள மூத்த கலைஞர்கள் வைஜெயந்தி மாலா மற்றும் பத்மா சுப்ரமணியம் ஆகிய இருவருக்கும் எனது வாழ்த்துகள். மேலும் பத்மஸ்ரீ விருதுக்குத் தேர்வாகியுள்ள பத்திரப்பன் (கலை) ஜோஷ்னா சின்னப்பா (விளையாட்டு), ஜோ…
சித்த மருத்துவம்: மாவட்ட, நகர அளவில் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும்.. அன்புமணி வலியுறுத்தல்!
சித்த மருத்துவத்தின் சிறப்புகள் மற்றும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சித்த ஆரோக்கியம் மற்றும் விழிப்புணர்வு (Siddha Wellness & Awareness Campaign) என்ற தலைப்பிலான விழிப்புணர்வு இரு சக்கர ஊர்தி பேரணியை தில்லியில் தொடங்கி கன்னியாகுமரி வரை தேசிய சித்த…
தமிழகத்தில் ஆளுநர் தேசிய கொடியை ஏற்றினார்
சென்னை, காமராசர் சாலையில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
வெங்கையா நாயுடு, விஜயகாந்த் உள்ளிட்ட பத்ம விருது வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள்! அன்புமணி ராமதாஸ்
2024-ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் மொத்தம் 132 பேருக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் இரண்டாவது சிறந்த விருதான பத்மவிபூஷன் விருதுக்கு தேர்வாகியுள்ள இந்தியக் குடியரசின் முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் மத்திய அமைச்சர் சிரஞ்சீவி, முன்னாள்…
வெங்கையா நாயுடு, நடிகர் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் விருது.. டிடிவி தினகரன் வாழ்த்து…
பத்ம விபூஷண் விருதுக்கு தேர்வாகியுள்ள குடியரசு முன்னாள் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள், திரைப்பட நடிகர் சிரஞ்சீவி அவர்கள், நடனக்கலைஞர் வைஜெயந்திமாலா அவர்கள், நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியம் அவர்கள், ஆகியோருக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.…
