‘மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் தொழிலாளர்கள் பெறும் ஊதியம் வரலாறு காணாத சரிவை சந்தித்திருப்பதாக அரசு புள்ளிவிவரங்களே அம்பலப்படுத்தி உள்ளன’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் உட்பட பல தரவுகள் ஒரு உண்மையை அம்பலப்படுத்தி உள்ளன. அது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று தொழிலாளர்கள் பெறும் ஊதிய வளர்ச்சி விகிதம் குறைந்திருப்பதை நிரூபித்துள்ளன. மெதுவான ஊதிய வளர்ச்சி மற்றும் அதிகரிக்கும் பணவீக்கம் ஆகியவற்றின் கலவையால் தொழிலாளர்கள் ஊதியம் வரலாறு காணாத சரிவை எட்டியுள்ளது. ஒன்றிய அரசின் ஊதிய விகித இன்டெக்ஸ் தரவு, 2014 முதல் 2023ம் ஆண்டுக்கு இடையே, தொழிலாளர்களின் ஊதியம் சரிந்துள்ளதாகவும், குறிப்பாக, மோடியின் 2வது 5 ஆண்டு ஆட்சியில் மிகப்பெரும் சரிவு இருப்பதாகவும் கூறி உள்ளது.
வேளாண் அமைச்சகத்தின் வேளாண் புள்ளிவிவரங்கள், முந்தைய மன்மோகன் சிங் ஆட்சியில் விவசாய தொழிலாளர்களின் ஊதிய விகித வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு 6.8 சதவீதம் வளர்ச்சி அடைந்ததாகவும், அதுவே பிரதமர் மோடியின் ஆட்சியின் ஒவ்வொரு ஆண்டும் மைனஸ் 1.3 சதவீதம் குறைந்ததாகவும் கூறி உள்ளது. சென்டர் பார் லேபர் ரிசர்ச் அண்ட் ஆக்ஷன் தரவானது, 2017 முதல் 2022க்கு இடைப்பட்ட காலத்தில் சம்பளம் பெறும் தொழிலாளர்கள், தினக்கூலிகள், சுய தொழில் செய்வோரின் சராசரி வருவாய் கடுமையாக சரிந்திருப்பதாக கூறி உள்ளது. ஏழைகளின் கடைசி முயற்சியான செங்கல் சூளையிலும் ஊதிய விகிதம் 10 ஆண்டில் சரிந்துள்ளது.
இதனால், சுமார் 50 ஆண்டுகளில் முதல் முறையாக கிராமப்புற மக்களின் நுகர்வு வீழ்ச்சியை அடைந்ததாக தேசிய புள்ளியியல் துறை தரவு வெளியிட்டது. அதையும் மோடி அரசு மறைக்க முயற்சித்தது. இத்தகைய சரிவுகள் காரணமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (10 ஆண்டு சராசரி) தனியார் முதலீடு விகிதம், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 33.4 சதவீதமாக இருந்த நிலையில் அது மோடியின் ஆட்சியில் 28.7 சதவீதமாக சரிந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீடு காங்கிரஸ் ஆட்சியில் 2004ல் 0.8 சதவீதத்தில் இருந்து 2014ல் 1.7 சதவீதமாக உயர்ந்தது. அது, 2022ல் 1.5 சதவீதமாக குறைந்துள்ளது.
இவை அனைத்தும் சேர்ந்து பொருளாதார வளர்ச்சியை கீழே இழுத்து, வேலையின்மை நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளன. தொழிலாளர்கள் ஊதியம், தனியார் துறை முதலீடு மற்றும் நுகர்வு வளர்ச்சி ஆகியவற்றில் காங்கிரஸ் கூட்டணி அரசு வலுவாகச் செயல்பட்டது. இதனால் மோடி அரசின் 5.8% பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், 7.5% வளர்ச்சியை காங்கிரஸ் அரசு எட்டியது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து தொழிலாளர்களின் சம்பளம் சரிந்துள்ளது. இந்த நிலையை மாற்றி, ஜூன் 4ம் தேதிக்குப்பிறகு இந்திய கூட்டணி ஆட்சிக்கு வரும்போது நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பச் செய்வோம். இவ்வாறு கூறி உள்ளார்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..