தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு வேண்டுகோள், நட்சத்திரக் கலைநிகழ்ச்சி நடத்தி நிதி திரட்ட முடிவு
மலையாளப் படவுலகில் ஹேமா கமிட்டி தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்ப் படவுலகில் எடுத்த முன்னெச்சரிக்கை தொடர்பான விவாதம் உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து முடிவெடுக்க, சென்னையில் நேற்று காலை 10 மணியளவில், தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொதுக்குழு கூட்டம் நடந்தது.
இக் கூட்டத்திற்கு சங்க தலைவர் நடிகர் நாசர் தலைமை தாங்கினார்.
பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் கருணாஸ், பூச்சி எஸ்.முருகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். தமிழகம் முழுவதும் இருக்கும் மேடை நாடக கலைஞர்கள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.சமீபகாலமாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு நடந்த நடிகர் சங்க செயற்குழு கூட்டத்தில், தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் ஏற்பட்ட பிரச்னைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாசர் தெரிவித்தார். நேற்று நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில், திரைப்பட தயாரிப்பு மற்றும் படப்பிடிப்பு பணிகளை நிறுத்துவது குறித்த தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவு குறித்து விவாதிக்கப்பட்டது.கூட்டத்தில் மூத்த நடிகர் டெல்லி கணேஷ், நடிகை சி.ஆர்.விஜயகுமாரி ஆகியோருக்கு கலையுலக வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
அத்துடன் நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் முகம் பொறிக்கப்பட்ட தங்க டாலரும் வழங்கப்பட்டது. தவிர, மூத்த கலைஞர்கள் காத்தாடி ராமமூர்த்தி, ‘பசி’ சத்யா, அழகு, முத்துக்காளை, எஸ்.சி.கலாவதி, எம்.கலாவதி, எம்.ஆர்.சோலைவள்ளி, எம்.காமராஜ், பிரசாத் வி.சி.ராஜேந்திரன், எம்.ஏ.பிரகாஷ் ஆகியோருக்கு நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் விருது மற்றும் அவரது முகம் பொறிக்கப்பட்ட தங்க டாலர் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. போதிய நிதியின்றி நடிகர் சங்க புதிய கட்டிடப் பணிகள் தாமதமாகி வரும் நிலையில், நட்சத்திரக் கலைநிகழ்ச்சி நடத்தி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பொருளாளர் கார்த்தி கூறுகையில், ‘புதிய கட்டிடம் கட்ட நிதி திரட்ட நடத்தப்படும் நட்சத்திரக் கலைநிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைந்து மேடை நாடகத்தில் நடிக்க சம்மதித்துள்ளனர்’ என்றார்.
பாலியல் புகாரில் சிக்கும் நடிகர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்ற தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்து, அதை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் அளிக்கவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடிகர் சங்கம் துணை நிற்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த நடிகை ரோகிணி தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் புகார்களை அளிக்க சிறப்பு தொலைபேசி எண்களும், மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று, ரோகிணி தலைமையிலான குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் திரைக்கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறு கருத்துகளை தெரிவித்தால், சைபர் கிரைமில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க நடிகர் சங்கம் துணை நிற்கும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..