1987-88 நிதியாண்டில் 0.6 பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதியில் இருந்து 2022-23 நிதியாண்டில் 26.7 பில்லியன் அமெரிக்க டாலராக விவசாய ஏற்றுமதி உயர்வு.
1987-88 ஆம் ஆண்டில் 0.6 பில்லியன் அமெரிக்க டாலர் வருடாந்திர ஏற்றுமதியுடன் தொடங்கிய, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் செயலூக்கமான தலையீடுகள் காரணமாக 2022-23 நிதியாண்டில் விவசாய ஏற்றுமதி 26.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. அதிவேக வளர்ச்சியின் இந்தப் பயணம் 200 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி வரம்பை விரிவுபடுத்தியுள்ளது. இது 12% என்ற பாராட்டத்தக்க கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தைக் காட்டுகிறது.
2022-23 ம் நிதியாண்டில், இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி 53.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது, இந்தியாவின் வேளாண் ஏற்றுமதியில் ஆணையம் கணிசமான அளவுக்கு 51% பங்களித்துள்ளது. 2023 ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில், ஆணையத்தின் ஏற்றுமதி கூடையில் உள்ள 23 முக்கிய பொருட்களில், 18 நேர்மறையான வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன. புதிய பழங்கள் ஏற்றுமதி 29% வளர்ச்சியைப் பதிவு செய்து, ஒரு தனித்துவமான செயல்திறனாக வெளிப்பட்டது. மேலும், பதப்படுத்தப்பட்ட காய்கறிகளின் ஏற்றுமதி 24% அதிகரித்துள்ளது, அதைத் தொடர்ந்து இதர பதப்படுத்தப்பட்ட பொருட்கள், பாஸ்மதி அரிசி மற்றும் புதிய காய்கறிகள் ஆகியவையும் கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடும்போது கணிசமான வளர்ச்சியைக் கண்டன. குறிப்பிடத்தக்க வகையில், இந்தியா தனது புதிய பழங்கள் ஏற்றுமதி தடத்தை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது, முந்தைய ஆண்டில் 102 இடங்களுடன் ஒப்பிடும்போது இப்போது 111 நாடுகளுக்கு சேவை செய்கிறது.
13.02.2024 அன்று அதன் 38வது நிறுவன தினத்தன்று, விவசாய ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான ஒரு பயணத்தை ஆணையம் நினைவுகூர்ந்தது, வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் 1986 இல் நிறுவப்பட்ட ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் இந்தியாவின் வேளாண் ஏற்றுமதியை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்வதில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.
ஏப்ரல்-நவம்பர் 2023 இல், பல முக்கிய பொருட்கள் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது கணிசமான வளர்ச்சியைக் கண்டன, உதாரணமாக, வாழைப்பழங்கள்: 63%, பயறு (உலர்ந்த மற்றும் ஷெல் செய்யப்பட்டவை): 110%, புதிய முட்டைகள்: 160% ஆகியவை அடங்கும்.
.2023 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், பாசுமதி அரிசியின் ஏற்றுமதி மதிப்பு 19% அதிகரித்து, முந்தைய ஆண்டில் 3.33 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் ஒப்பிடும்போது 3.97 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது. அதே நேரத்தில், ஏற்றுமதியின் அளவு 11% குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டது, அதே காலத்திற்குள் 31.98 லட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 35.43 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. ஈரான், ஈராக், சவுதி அரேபியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை இந்த ஏற்றுமதிக்கான முதல் ஐந்து இடங்களாக வெளிவருவதால், பாஸ்மதி அரிசி சிறந்த சந்தைகளுக்கு வழிவகுத்தது. இந்த வலுவான செயல்திறன் பாஸ்மதி அரிசிக்கான நீடித்த புகழ் மற்றும் உலகளாவிய தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..