நாடு முழுவதும் நடைபெற்ற 12வது வேலைவாய்ப்புத் திருவிழாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார். தமிழ்நாட்டில் சென்னை ஆவடியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு விழாவில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ஏ நாராயணசாமி கலந்துகொண்டு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் மத்திய ஆயுதக் காவல் படைகள், இந்தியக் கடலோரக் காவல் படை, பொதுத்துறை வங்கிகள், அஞ்சல் துறை, நிதித்துறை மற்றும் பாதுகாப்பு துறையை சேர்ந்த 191 பேருக்குப் பணி நியமன ஆணைள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கிய கவனம் செலுத்தி, முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது என்றார். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 10 லட்சம் வேலை வாய்ப்புகளை வழங்கும் வேலைவாய்ப்பு விழாவைக் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் தொடங்கி வைத்தார் என்றும், இன்று 12 வது நிகழ்ச்சி நாடு முழுவதும் 47 இடங்களில் நடைபெறுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாட்டிலுள்ள ஏழைகள், இளைஞர்கள், மகளிர் மற்றும் சமுதாயத்தின் நலிந்த பிரிவினர் என அனைவரின் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு அவர்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
இளைஞர்களின் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படும் ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா போன்ற திட்டங்கள் மூலம் அவர்கள் சுயமாகத் தொழில் தொடங்கி வேலை தேடுபவராக இல்லாமல் வேலை வழங்குபவராக சமுதாயத்தில் உயர வழி வகுத்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டம், நாட்டிலுள்ள கைவினைஞர்களின் வாழ்வாதாரம் மேம்படவும், அவர்களின் திறமையை உலகறியச் செய்யவும் முடியும் என்று அமைச்சர் கூறினார்.
புதிதாகப் பணி நியமன ஆணைகள் பெறும் இளைஞர்கள் கர்மயோகி தளத்தில் சிறப்பு பயிற்சிகளைப் பெறுவார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார். இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்ற தங்களுடைய பணியை சிறப்பாக செய்யுமாறு இவர்களை அமைச்சர் வலியுறுத்தினார்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..