பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு, புதிய தேர்தல் ஆணையர்களாக கேரளாவின் ஞானேஷ் குமார், பஞ்சாப்பின் சுக்பீர் சிங் சாந்து ஆகியோரை தேர்வு செய்தது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், தேர்தல் ஆணையராக இருந்த அருண் கோயல் கடந்த 9ம் தேதி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். ஏற்கனவே கடந்த மாதம் 14ம் தேதி பதவிக்காலம் முடிந்து அனூப் சந்திர பாண்டே ஓய்வு பெற்றிருந்தார். இதனால் தேர்தல் ஆணையத்தில் 2 தேர்தல் ஆணையர்கள் இல்லாமல், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மட்டும் எஞ்சியிருந்தார்.
இதைத் தொடர்ந்தும் தேதிக்குள் 2 புதிய தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவார்கள் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தலைமையிலான தேடல் குழு 200க்கும் மேற்பட்டோர் கொண்ட தேர்வு செய்தது. அதிலிருந்து, உத்பல் குமார் சிங், பிரதீப் குமார் திரிபாதி, ஞானேஷ் குமார், இந்தேவர் பாண்டே, சுக்பீர் சிங் சாந்து, சுதிர் குமார் கங்காதர் ரகாதே ஆகிய 6 பேர் கொண்ட உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த உத்தேச பட்டியலில் இருந்து 2 தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்காக பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு நேற்று கூடியது.
இந்த தேர்வுக்குழுவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலும் கூட்டத்தில் பங்கேற்றார். இக்குழு கேரளாவை சேர்ந்த ஞானேஷ் குமார் மற்றும் பஞ்சாப்பை தேர்தல் சுக்பீர் சிங் சாந்து ஆகியோரை புதிய தேர்தல் ஆணையர்களாக தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு அவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. உடனடியாக ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து நேற்றே புதிய ஆணையர்களாக ஞானேஷ்குமார், சுக்பீர் சிங் சாந்து புதிய ஆணையர்களாக நியமிக்கப்பட்டனர்.
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான புதிய சட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்களை பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்யும். இக்குழுவில், ஒன்றிய அமைச்சர் ஒருவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் உறுப்பினர்களாக இருப்பார்கள். இதற்கு முன் இக்குழுவில் உச்ச நீதிமன்ற நீதிபதி இருந்தது புதிய சட்டம் மூலம் நீக்கப்பட்டது. இந்த புதிய தேர்வு நடைமுறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட உள்ள வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், புதிய தேர்தல் ஆணையர்களை ஒன்றிய அரசு நேற்று அவசர அவசரமாக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* யார் இவர்கள்?
ஞானேஷ்குமார் மற்றும் சுக்பீர் சிங் சாந்து ஆகியோர் 1988 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரிகள். ஒன்றிய உள்துறை அமைச்சக முன்னாள் செயலாளரான ஞானேஷ் குமார், காஷ்மீருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை செயல்முறையை மேற்பார்வையிட்டவர். உத்தரகாண்ட் முன்னாள் தலைமைச் செயலாளரான சுக்பீர் சிங் சாந்து, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான திட்டத்தை மேற்பார்வையிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
* சம்பிரதாய கூட்டம் ஆதிர் ரஞ்சன் காட்டம்
கூட்டத்திற்கு பின் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த தேர்வுக்குழு உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘‘தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்ட நடைமுறை எனக்கு பிடிக்கவில்லை. தேர்வுக்குழு கூடுவதற்கு முன்பாக அரசிடம் தேடல் குழுவின் பட்டியலை கேட்டேன். அவர்கள் குழு கூடுவதற்கு முந்தைய நாள் 212 பேரின் பெயர்களை கொடுத்தார்கள். அதில் உள்ள பலரும் பெரிய பொறுப்புகளில் உள்ளவர்கள். ஒரே நாள் இரவில் அத்தனை பேரின் விவரங்களையும் அலசி ஆராய்வது மனித சக்திக்கு அப்பாற்பட்டது. பின்னர் கூட்டம் கூடுவதற்கு 10 நிமிடத்திற்கு முன்பாகத்தான் 6 கொண்ட உத்தேச பட்டியல் தந்தனர். அந்த 6 பேர் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதற்கான விளக்கம் எதுவும் தரவில்லை. எனவே இதில் 2 பேரை தேர்வு செய்வதற்கு நான் உடன்படவில்லை. அவர்களின் நியமனத்தை எதிர்த்தேன். ஆனால் பெரும்பான்மை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். நான் ஒரு சம்பிரதாயமாக மட்டுமே அழைக்கப்பட்டேன். எனவே தேர்வுக்குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்திருந்தால் நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும். தேர்வுக்குழுவில் பெரும்பான்மை பலம் என்பது அரசுக்கு ஆதரவாக உள்ளது. அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப என்ன வேண்டுமானாலும் நடக்கும்’’ என்றார்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..