தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2021-22 ஆம் ஆண்டில் 3.1 கோடியிலிருந்து 2022-23 ஆம் ஆண்டில் 3.43 கோடியாக அதிகரித்துள்ளது.
வேலைவாய்ப்பை உருவாக்குவதுடன் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதே அரசின் முன்னுரிமையாகும். அதன்படி, நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
வணிக நிறுவனங்களுக்கு ஊக்கத்தை வழங்குவதற்கும், கோவிட் 19 -ன் பாதகமான தாக்கத்தைத் தணிப்பதற்கும் மத்திய அரசு தற்சார்பு இந்தியா தொகுப்பை அறிவித்துள்ளது. இந்தத் தொகுப்புத் திட்டத்தின் கீழ், அரசு இருபத்தி ஏழு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி ஊக்கத்தை வழங்கியுள்ளது. இந்தத் தொகுப்பில் நாட்டை தற்சார்புடையதாக மாற்றுவதற்கும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் பல்வேறு நீண்டகால திட்டங்கள் / கொள்கைகள் உள்ளன.
கொவிட் -19 தொற்றுநோய்களின் போது புதிய வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும் வேலை இழப்பை மீட்டெடுப்பதற்கும் முதலாளிகளை ஊக்குவிப்பதற்காக தற்சார்பு இந்தியா வேலைவாய்ப்பு திட்டம் 2020 அக்டோபர் 1 முதல் தொடங்கப்பட்டது. பயனாளிகளை பதிவு செய்வதற்கான இறுதி தேதி 31.03.2022 ஆகும். இத்திட்டம் தொடங்கப்பட்ட நாள் முதல் 19.01.2024 வரை 60.49 இலட்சம் பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் பலன்கள் வழங்கப்பட்டுள்ளன. கோவிட் -19 தொற்றுநோய்களின் போது மோசமாக பாதிக்கப்பட்ட தெரு விற்பனையாளர்கள் தங்கள் வணிகங்களை மறுதொடக்கம் செய்ய அடமானம் இல்லாத மூலதனக் கடனை எளிதாக்குவதற்காக ஜூன் 01, 2020 முதல் பிரதம மந்திரி தெரு விற்பனையாளர்களின் தற்சார்பு நிதி திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 31.01.2024 வரை 83.67 லட்சம் கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் முத்ரா திட்டம் சுயவேலைவாய்ப்பை எளிதாக்குவதற்காக அரசால் தொடங்கப்பட்டது. ரூ.10 லட்சம் வரை பிணையம் இல்லாத கடன்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் 26.01.2024 வரை 46.16 கோடி கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டம் ரூ.1.97 லட்சம் கோடி ஒதுக்கீட்டில், 2021-22 முதல் 5 ஆண்டு காலத்திற்கு அரசால் செயல்படுத்தப்படுகிறது, இது 60 லட்சம் புதிய வேலைகளை உருவாக்கும் திறன் கொண்டது.
வேலைவாய்ப்பை உருவாக்கும் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், தீன் தயாள் அந்தோதயா யோஜனா, தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் போன்ற திட்டங்களில் கணிசமான முதலீடு மற்றும் பொது செலவினம் சம்பந்தப்பட்ட பல்வேறு திட்டங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஊரக சுய வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த முன்முயற்சிகள் தவிர, மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, அனைவருக்கும் வீட்டு வசதி போன்ற அரசின் பல்வேறு முன்னோடித் திட்டங்களும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்த முயற்சிகள் அனைத்தும் கூட்டாக நடுத்தர முதல் நீண்ட கால வேலைவாய்ப்புகளை பன்மடங்கு விளைவுகள் மூலம் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
- டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)The film is written/directed by director Shanmugam Muthusamy. Harish Kalyan, Athulya Ravi are in the lead. டீசல் (Diesel) – தமிழ்… Read more: டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)
- ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்Union Health Secretary releases training packages on public health management of chemical hazards ரசாயன ஆபத்துகள் என்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு… Read more: ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்
- தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை “தூய்மை இயக்கம்” என்ற மாநில அளவிலான இயக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தின் வாயிலாக உருவாக்கப்படும்… Read more: தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..










