தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினமான இன்று பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“பூஜ்ய பாபுவின் நினைவு நாளை முன்னிட்டு நான் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் தியாகங்கள் மக்களுக்கு சேவை செய்யவும், நமது தேசத்திற்கான அவர்களின் தொலைநோக்கை நிறைவேற்றவும் நமக்கு ஊக்கமளிக்கின்றன”.