ஹைதராபாத்தில் 2024 பிப்ரவரி 16 நிலக்கரி, பழுப்பு நிலக்கரி, வாயுவாக்கல் திட்டங்களை ஊக்குவிப்பதற்கான தொழில் துறை கலந்துரையாடலை நிலக்கரி அமைச்சகம் வெற்றிகரமாக நடத்தியது. இதையடுத்து நாளை (2024 பிப்ரவரி 21) மும்பையில் மற்றொரு கலந்துரையாடலை நிலக்கரி அமைச்சகம் ஏற்பாடு உள்ளது. நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் அம்ரித் லால் மீனா இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்வு நாடு முழுவதும் நிலக்கரி, பழுப்பு நிலக்கரி வாயுவாக்கல் திட்டங்களின் வளர்ச்சியையும், பரவலாக்கலையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாட்டின் எதிர்கால எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய நிலக்கரி, பழுப்பு நிலக்கரி வாயுவாக்கும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டத்தின்படி, அரசு பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் சிறிய அளவிலான திட்டங்கள் என 3 பிரிவுகளின் கீழ் நிலக்கரி, பழுப்பு நிலக்கரி வாயுமயமாக்கும் திட்டங்களுக்கு நிலக்கரி அமைச்சகம் ரூ. 8,500 கோடி முதலீட்டு செலவை வழங்கும்.
நிலக்கரி, பழுப்பு நிலக்கரி வாயுவாக்கல் திட்டங்களை ஊக்குவிப்பது, எரிசக்தி ஆதாரங்களை பல்வகைப்படுத்துதல், இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்தல் மற்றும் தூய்மையான தொழில்நுட்பங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பைத் தவிர்த்தல் ஆகியவற்றில் அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எரிசக்தித் துறையில் புதிய கண்டுபிடிப்புகளையும், ஒத்துழைப்பையும் வளர்ப்பதில் நிலக்கரி அமைச்சகத்தின் அர்ப்பணிப்பை இந்த முயற்சி எடுத்துக் காட்டுகிறது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவும், இந்தியாவில் எரிசக்தியின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் பங்களிக்கவும் ஆர்வமுள்ள அனைத்து பங்குதாரர்களையும் நிலக்கரி அமைச்சகம் அழைத்துள்ளது.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..