தமிழ்நாடு அஞ்சல் வட்டம் கடந்த 12.02.2024 முதல் சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடத்தி வந்த 35 ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டிகள் இன்றுடன் (16.02.2024) முடிவடைந்தன. இதில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 5 அணிகள் கலந்து கொண்டன.
16.02.2024 அன்று மதியம் 02:00 மணியளவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அணிகள் பங்கேற்றன. இதில் தமிழ்நாடு அணி நடப்பு சாம்பியனான கர்நாடகா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது. இப்போட்டியில் தமிழ்நாடு அணியைச் சேர்ந்த S.சுதர்ஷன் அவர்களுக்கு மிகச் சிறந்த ஆட்டத்திற்காக ஆட்டநாயகன் விருது வழங்கப்பெற்றது தொடர் நாயகனுக்கான விருது (Player of the Tournament) கர்நாடகா அணியைச் சேர்ந்த விநாயக் பிஜ்ஜாவாட் அவர்களுக்கு வழங்கப்பெற்றது.
போட்டியின் முடிவுகள்
வெற்றியாளர் | தமிழ்நாடு |
இரண்டாம் இடம் | கர்நாடகா |
மூன்றாவது இடம் | மத்திய பிரதேசம் |
நான்காவது இடம் | ஒடிசா |
போட்டிகளின் நிறைவு விழா 16.02.2024 அன்று மாலை 4 மணியளவில் மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது. இதில் அஞ்சல் தலைமை இயக்குநர் ஸ்மிதா குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். Ms B.P. ஸ்ரீதேவி, தமிழ்நாடு முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன், ஒலிம்பியன் மற்றும் அர்ஜுனா விருது பெற்ற முகமது ரியாஸ் நபி, அவர்கள் கௌரவ விருந்தினராகப் பங்கேற்று விழாவினை சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் 35 ஆவது அகில இந்திய ஹாக்கி போட்டியின் சிறப்பு முத்திரை பொறிக்கப்பட்ட அஞ்சல் அட்டையை சிறப்பு விருந்தினர் ஸ்மிதா குமார் வெளியிட்டார்.
விழாவில் Ms B.P.ஸ்ரீதேவி, தமிழ்நாடு முதன்மை அஞ்சல் துறைத் தலைவர் வரவேற்புரை நல்கிட B.ஆறுமுகம், தமிழ்நாடு அஞ்சல் இயக்குனர் நன்றியுரை ஆற்றினார்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..