மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் உற்பத்திதுறை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வேற்று விளம்பரங்களால் தோல்வியை மறைக்க முடியாது என்றும் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் தொழில்துறை சந்தித்துள்ள பெரும் சரிவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பட்டியலிட்டுள்ளார். இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தலத்தில் பதிவிட்டுள்ள கார்கே 10 ஆண்டுகளுக்கு முன்னர் பிரதமர் மோடி மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியா வழக்கத்தை முன்வைத்ததை குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் மோடி அரசின் தவறான கொள்கைகளால் இந்தியாவின் உற்பத்தித்துறை சீரழிந்து விட்டதாக கார்கே சாடியுள்ளார். இது தொடர்பாக அப்பட்டமான 5 உண்மைகள் என தொழில் துறையில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சி காலங்களில் ஏற்பட்ட மாற்றங்களை பட்டியலிட்டுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் உற்பத்தி துரையின் சராசரி வளர்ச்சி விகிதம் 7.85 விழுக்காடாக இருந்தது. ஆனால் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் அந்த வளர்ச்சி விகிதம் 3.1 சதவீதமாக குறைந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் தொழிற்சாலைகளில் பணியாளர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 6.2 விழுக்காடு வளர்ச்சி அடைந்தது. ஆனால் பாஜக ஆட்சியில் அந்த எண்ணிக்கை 2.8 சதவீதமாக சரிந்துள்ளது. பாஜக ஆட்சியில் ஜி.டி.பியில் உற்பத்தி துறையின் பங்களிப்பு கடும் சரிவை கண்டுள்ளதாக கார்கே விமர்சித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவின் ஜி.டி.பியில் 15.25 விழுக்காடாக இருந்த உற்பத்தி துறையின் பங்களிப்பு பாஜக ஆட்சியில் 11.6 சதவீதமாக சரிந்துள்ளது. சோலார் உற்பத்தி, பேட்டரிகள் தயாரிப்பு, ஜவுளித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிர்ணயிக்கப்பட்ட உற்பத்தி இலக்கை எட்ட முடியவில்லை என்றும் மோடி அரசின் மோசமான கொள்கைகளே இதற்கு காரணம் என்றும் நிபுணர்கள் விமர்சிப்பதாக கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.
லாபம் ஈட்டித்தரும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் மோடியின் பணக்கார நண்பர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக சாடியுள்ள கார்கே. அரசு பணிகளில் காலி பணியிடங்களை நிரப்பாமல் 5.1 லட்சம் பணியிடங்களை நீக்கியுள்ளதாக குற்றம்சாட்டி இருக்கிறார். எஸ்.சி.எஸ்.டி, ஓ.பி.சி பிரிவினருக்கான 1.3 லட்சம் பணியிடங்கள் மோடி ஆட்சியில் குறைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் தொழிற்சாலைகளில் 5 சதவீதம் மட்டுமே ஒப்பந்தம் ஊழியர்களாக பணியாற்றினர். ஆனால் பாஜக ஆட்சியில் ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கை 40 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள கார்கே மேக் இன் இந்தியா விளம்பரத்தால் தொழில்துறை சீரழிவை மறைத்து விட முடியாது என்றும் கூறியுள்ளார்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..