ஐக்கிய அரபு அமீரக துணை அதிபர், பிரதமர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அழைப்பின் பேரில், பிரதமர் நரேந்திர மோடி 2024, பிப்ரவரி 14 அன்று துபாயில் நடைபெற்ற உலக அரசுகளின் உச்சி மாநாட்டில் கௌரவ விருந்தினராக பங்கேற்றார்.
“எதிர்கால அரசுகளை வடிவமைத்தல்” என்ற இந்த உச்சிமாநாட்டின் கருப்பொருளில் அவர் சிறப்புரையாற்றினார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற உலக அரசுகளின் உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் பங்கேற்றார். இந்த முறை நடைபெற்ற உச்சி மாநாட்டில் 10 நாடுகளின் அதிபர்கள், 10 நாடுகளின் பிரதமர்கள் உட்பட 20 உலகத் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அரசுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் உரையாற்றிய பிரதமர், நிர்வாகத்தின் தன்மை குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். “குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுமை” என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் இந்தியாவின் மாற்றத்துக்கான சீர்திருத்தங்களை அவர் எடுத்துரைத்தார். நலன், உள்ளடக்கம் மற்றும் நிலைத்தன்மைக்கு நாடு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது குறித்த இந்திய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், நிர்வாகத்திற்கான மனிதநேய அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்தார். அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை அடைய மக்களின் பங்கேற்பு, அனைத்துப் பகுதி மக்களுக்கும் பயன்களைச் சென்றடையச் செய்தல், மகளிர் தலைமையிலான வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியா கவனம் செலுத்தி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
உலக நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைக்கப்பட்டுள்ள தன்மையைக் கருத்தில் கொண்டு, எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அரசுகள் ஒத்துழைத்து ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். அனைவரையும் உள்ளடக்கிய, தொழில்நுட்ப ரீதியான, தூய்மையான வெளிப்படையான, பசுமையான அம்சங்கள் தற்போதைய நிர்வாகத்தின் அவசியம் என்று அவர் எடுத்துரைத்தார்.
இந்தச் சூழலில், அரசுகள் பொதுச் சேவையில் தங்களது அணுகுமுறையில், எளிதான வாழ்க்கைமுறை, எளிதான நீதி, எளிதான போக்குவரத்து, புதிய கண்டுபிடிப்புகளை எளிதாக்குதல் மற்றும் வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார். பருவநிலை மாற்ற நடவடிக்கைகளில் இந்தியாவின் உறுதிப்பாட்டை விவரித்த அவர், நீடித்த உலகை உருவாக்க இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை இயக்கத்தில் மக்கள் சேர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
உலகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு இடையே கடந்த ஆண்டு ஜி-20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றது குறித்து பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார். இந்தச் சூழலில், உலகளாவிய தென்பகுதி நாடுகள் எதிர்கொள்ளும் வளர்ச்சிக் குறித்த கவலைகளை உலகளாவிய விவாதத்தின் மைய அரங்கிற்கு கொண்டு வர இந்தியா மேற்கொண்ட முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.
பன்னாட்டு அமைப்புகளில் சீர்திருத்தம் தேவை என்று அழைப்பு விடுத்த அவர், முடிவெடுப்பதில் உலகளாவிய தென்பகுதி நாடுகளுக்கு அதிக ஆதரவு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். “உலக நாடுகளின் நண்பன்” என்ற தனது பங்கின் அடிப்படையில் உலகளாவிய முன்னேற்றத்திற்கு இந்தியா தொடர்ந்து பங்களிக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..