விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்கு கடற்படை தளத்திற்கு 2024, மார்ச் 21 – 23 தேதிகளில் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் மற்றும் கடற்படையினர் நலன் மற்றும் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் கலா ஹரி குமார் ஆகியோர் பயணம் மேற்கொண்டனர்.
இந்தப் பயணத்தின்போது, விசாகப்பட்டினம் கிழக்கு கடற்படை தளத்தில் அட்மிரல் ஆர் ஹரி குமார் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார். இங்கு அவர் கடற்படை நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். கடற்படை கப்பல்கள் மற்றும் விமானங்களில் உள்ள அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுடன் அவர் உரையாடினார். கூடுதலாக, அடித்தள நிலையில் உள்ள சவால்கள் / பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்காக, அவரது பிரியாவிடை பயணத்தின் ஒரு பகுதியாக, சமுத்ரிகா கலையரங்கில் நடைபெற்ற “சிஎன்எஸ்- உடன் இணைவோம்” என்ற ஒரு தனித்துவ நிகழ்வில் கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுடன் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான கலந்துரையாடலில் ஈடுபட்டார். அதற்கு முன்னதாக, கடற்படை கப்பல்கட்டும் தளத்தில் உள்ள மேகத்ரி கலையரங்கில் பாதுகாப்பு சிவில் அதிகாரிகளுடன் 2024, மார்ச் 21 அன்று அவர் கலந்துரையாடினார்.
இந்தப் பயணத்தின்போது 2024, மார்ச் 21 அன்று விசாகப்பட்டினம், நௌசக்தி நகரில் பாதுகாப்புப் படை வீரர்களுக்காகக் கட்டப்பட்ட ‘வீரம்’ என்ற 492 பேர் தங்குமிடத் தொகுப்பைக் கடற்படைத் தளபதி திறந்து வைத்தார்.
மத்திய அரபிக் கடலில் 11 சோமாலிய கடற்கொள்ளையர்களை கைது செய்ததற்காகவும், கடத்தப்பட்ட மீன்பிடிக் கப்பல்களான இமான், அல் நயீமி ஆகியோரிடமிருந்து 17 ஈரானியர்கள் மற்றும் 19 பாகிஸ்தானியர்களை மீட்டதற்காகவும் ஐஎன்எஸ் சுமித்ராவுக்கு அந்த இடத்திலேயே கடற்படைத் தளபதி பாராட்டு தெரிவித்தார். ஒருங்கிணைந்த தீயணைப்பு சக்தி, உள்நாட்டு ஏ.எல்.எச் ஹெலிகாப்டர் மற்றும் இந்தியக் கடற்படையின் சிறப்பு நடவடிக்கைகள் குழு ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்தப் பணிகளைக் கடற்படை விரைவாக மேற்கொண்டது.
இந்த சந்திப்புகள் கடற்படை வீரர்களின் நலன் மற்றும் ஊக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பயனுள்ள விவாதங்கள் மற்றும் கூட்டு முயற்சிகளுக்கு மதிப்புமிக்க வாய்ப்புகளை வழங்கின.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..