ஜம்முவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து காங்கிரஸ் தலைவர் கார்கே கூறிய கருத்துக்கள் முற்றிலும் வெறுக்கத்தக்கது மற்றும் அவமானகரமானது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் ஜஸ்ரோதாவில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டார். அப்போது திடீரென அவர் மயக்கமடைந்தார். பின்னர் கட்சி நிர்வாகிகள் அவரை ஆசுவாசப்படுத்தினார்கள். இதனை தொடர்ந்து சிறிது நேரம் கழித்து பேசிய கார்கே, \”எனக்கு 83 வயதாகிறது. நான் அவ்வளவு சீக்கிரத்தில் இறக்க மாட்டேன். பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை நான் இறக்கமாட்டேன்\” என்றார்.
இந்நிலையில் கார்கேவின் கருத்துக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அமித் ஷா தனது எக்ஸ் பதிவில்,\”நேற்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது பேச்சுக்கள் முற்றிலும் வெறுக்கத்தக்கதாகவும், அவமானகரமானதாகவும் இருப்பதில் அவரது தலைவர்களையும், கட்சியையும் காட்டிலும் சிறப்பாக செயல்பட்டார். பிரதமர் மோடியை ஆட்சியில் இருந்து நீக்கிய பிறகு தான் மரணம் அடைவேன் என்று கூறி தேவையில்லாமல் பிரதமர் மோடியை தனது தனிப்பட்ட உடல்நல விஷயங்களுக்காக இழுத்துவிட்டுள்ளார். பிரதமர் மோடி மீது காங்கிரஸ் கட்சியினருக்கு எவ்வளவு வெறுப்பு மற்றும் பயம் உள்ளது என்பதை கார்கேவின் கருத்துக்கள் காட்டுகின்றது. திரு கார்கேயின் ஆரோக்கியத்திற்காக பிரார்த்திக்கிறேன். அவர் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும்\” என்று குறிப்பிட்டுள்ளார்.
தீவிரமான பிரச்னைகளில் கவனம் செலுத்துங்கள்
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு பதிலடி அளித்துள்ள காங்கிரஸ் தலைவர் கார்கே தனது எக்ஸ் பதிவில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, மணிப்பூர் விவகாரம், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட தீவிரமான பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும். நகர்ப்புற கழிவுநீர் கால்வாய் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் ஊழியர்களில் 92சதவீதம் பேர் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவை சேர்ந்தவர்கள் என்று உங்கள் அரசின் சொந்த கணக்கெடுப்பு கூறுகின்றது. சாதிவாரி கணக்கெடுப்புக்கு பாஜ எதிரானது. ஏனென்றால் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவை சேர்ந்தவர்கள் எந்த பணியின் மூலமாக வாழ்வாதாரத்தை கொண்டுள்ளனர் என்பது சாதிவாரி கணக்கெடுப்பில் தெரியவந்துவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..