கம்யூனிஸ்ட்கள் அழிய மாட்டார்கள், அதிமுக தான் காணாமல் போய் கொண்டிருக்கிறது’ என செல்லூர் ராஜுவுக்கு, சு.வெங்கடேசன் எம்.பி பத்திலாளித்துள்ளார். பாஜக இன்று தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. மதுரையை வஞ்சிக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட தற்பொழுது வரை பிரச்சினையாக தான் உள்ளது. மதுரை மெட்ரோ பணிக்கு பணம் தர மறுக்கிறார்கள். தமிழ்நாட்டு கான உரிமைகள் பறிக்கப்படுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் துவரிமான் மந்தையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த போது மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் பேசுகையில்; “அன்பான மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட துவரிமான் பகுதி மக்களே நடைபெற்ற முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க வருகை தந்துள்ளோம். அண்ணன் செல்லூர் ராஜூ மிக கடுமையாக கோபப்பட்டு பேசி உள்ளார்கள். என்ன காரணம் என்று தெரியவில்லை.
மதுரையின் நகர் பகுதியில் ஜீவாநகர், ஜெயந்திபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டத்தில் பேசி அண்ணன் செல்லூர் ராஜு அந்தப் பகுதிகளில் எல்லாம் கோபப்படாமல் பேசியவர்! துவரிமானில் ஏன் கோவப்பட்டு உள்ளார். என்று பார்த்தால், அதன் பின்னர் தான் தெரிந்தது துவரிமான் நான்கு வழி சாலையில் பாலம் கட்டுவதற்கு அனுமதி பெற்று தந்தைமைக்காக துவரிமான் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்து வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய விளம்பர பதாகை. அதனைப் பார்த்து தான் அந்த அளவுக்கு கோவப்பட்டு உள்ளார்.
செல்லூர் ராஜூ அவர்களே நாங்கள் தேர்தலின் போதே குறிப்பிட்டோம் இங்கு துவரிமான் சந்திப்பு நான்கு வழி சாலையில் உயர் மட்ட பாலம் கட்டுவதற்கு ஒன்றிய நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் பேசி உள்ளோம். விரைவில் பாலம் வரும் என்று கூறினோம். அப்படி கூறியதைப் போல இன்றைக்கு துவரிமான் நான்கு வழிச்சாலை பகுதியில் 46 கோடி ரூபாய் பெற்றுக் கொடுத்து விட்டு இன்றைக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்துள்ளோம்.
பாலம் கட்டுவதற்கு அனுமதியும், நிதி ஆணையும் பெற்று தந்தமைக்காக ஊரின் சார்பில் நன்றி அறிவிப்பு செய்து பதாகை வைத்துள்ளார்கள். நல்ல விஷயத்தை செய்தால் பாராட்ட வேண்டும் அதானே வழக்கம்! அண்ணன் செல்லூர் ராஜு, ஏற்கனவே இங்கு தான் அமைச்சராக இருந்தார், தற்பொழுது மூன்று ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். அவரே முன்னின்ற இந்த பாலம் குறித்த வேலையை செய்திருக்கலாம். ஒரு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு 46 கோடி ரூபாயை பாலம் கட்டுவதற்கு பெற்றுக் கொண்டு வந்துள்ளேன்.
விருதுநகரில் துவங்கி மதுரை வழியாக திண்டுக்கல் வரை மிக அதிகமாக விபத்து நடக்கிற சந்திப்பு துவரிமான் சந்திப்பு . ஒரு மாதத்திற்கு 15 முதல் 20 விபத்துக்கள் நடக்கின்றன. தொடர் மரணம் நிகழும் சந்திப்பாக அது இருகிறது . அனைவரும் நம்ம வீட்டில் உள்ளவர்கள் நம் உறவினர்கள் நம்ம ஊரை சேர்ந்தவர்கள் அதனாலேயே அவ்வளவு பெரிய முயற்சி எடுத்து பாலத்தை கட்ட நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. விரைவில் பாலம் கட்டுமான பணி துவங்க இருக்கிறது.
கம்யூனிஸ்ட்கள் அழியாக மாட்டார்கள் செல்லூர் ராஜூ அண்ணே! கம்யூனிஸ்டு அழிந்து விடுவார்கள் என்று செல்லூர் ராஜு சொல்லிக் கொண்டிருக்கிறார். அண்ணே நாங்கள் அழிய மாட்டோம். நடந்து முடிந்த இந்த நாடாளுமன்ற தேர்தலில் 1991ஆம் ஆண்டுக்கு பிறகு 35 ஆண்டுகள் பின்னர் இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினராக இன்று உங்கள் முன் வந்து நிற்கிறோம். அதிமுக தான் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. மதுரை தொகுதியில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. அண்ணன் செல்லூர் ராஜ்க்கு பணிவோடு சொல்லிக் கொள்வது பாசிச பாஜகவை எதிர்க்காத எந்த மாநில கட்சியும் கரைந்து காணாமல் போகும். அதுதான் கடந்த அரை நூற்றாண்டு இந்திய அனுபவம். கடைசியாக ஒரிஸா பிஜு ஜனதாதளம் வரை இது தான் நடந்துள்ளது.
பாஜக இன்று தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. மதுரையை வஞ்சிக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட தற்பொழுது வரை பிரச்சினையாக தான் உள்ளது. மதுரை மெட்ரோ பணிக்கு பணம் தர மறுக்கிறார்கள். தமிழ்நாட்டு கான உரிமைகள் பறிக்கப்படுகின்றது. அதனை எதிர்த்து போராடி உங்களது கட்சியை வளர்க்க பாருங்கள் என்று தெரிவித்துக் கொண்டு மகத்தான ஆதரவளித்த துவரிமான் மக்களுக்கும் வாக்காளர்களுக்கு, இந்த தேர்தலில் பாடுபட்ட தொண்டர்களுக்கு கழக உடன்பிறப்புகளுக்கு தோழர்களுக்கு அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பேசினார்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..