அதிமுகவை பலவீனப்படுத்த எட்டப்பர்கள் சதி திட்டம் தீட்டுகிறார்கள் என்று ஓபிஎஸ், சசிகலா, டி.டி.வி. தினகரன் மீது எடப்பாடி பழனிசாமி மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று ஓபிஎஸ், சசிகலா, டிடிவி மற்றும் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி, கட்சியில் நீக்கியவர்களை சேர்க்கவே முடியாது என்று பிடிவாதம் பிடித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 17ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் 53வது ஆண்டு கட்சி தொடக்க விழா நடந்தது. அப்போது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், ‘அதிமுகவில் இருந்து பிரிந்து போனவர்கள் இன்று எவ்வளவோ அவதாரம் எடுக்கிறார்கள். கட்சி விரோதமாக செயல்பட்டவர்கள் (சசிகலா, ஓபிஎஸ், டிடிவி) அகற்றப்பட்டு விட்டார்கள். இனி அவர்கள் எல்லாம் நீக்கப்பட்டவர்கள். அதனால் ஒன்னா போச்சு, இரண்டாக போச்சு என்ற கேள்வியை தயவுசெய்து ஊடகங்கள் விட்டு விடுங்கள். நீக்கப்பட்டவர்கள் இனி நீக்கப்பட்டவர்கள்தான்’ என்று ஆவேசமாக கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் மறுநாள் வெளியிட்ட அறிக்கையில், ‘ஜெயலலிதா மறைவிற்கு பின், துரோகம் உள்ளே நுழைந்ததன் விளைவாக, அதர்மங்கள் அதிகரித்து துரோக செயல்கள் தாண்டவமாடி, கட்சி அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. அனைவருக்குமான கட்சி என்ற நிலை துரோக கூட்டத்தால் குழிதோண்டி புதைக்கப்பட்டதன் காரணமாக, நாடாளுமன்ற மக்களவையில் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அதிமுக இன்று வெற்றிடமாக காட்சியளிக்கிறது. முதல்வர் பதவிக்கு பரிந்துரைத்தவர், முதல்வர் பதவியில் அமர்த்தியவர், முதல்வர் பதவியில் தொடர துணை புரிந்தவர்கள் என அனைவரையும் முதுகில் குத்திய துரோகியை மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பது தெளிவாகிறது.
இந்த துரோக செயல் காரணமாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் 45 விழுக்காடாக இருந்த வாக்கு வங்கி தற்போது 20 விழுக்காடாக குறைந்துவிட்டது. இப்படிப்பட்ட ‘துரோகம்’ தியாகத்தை பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதுபோல் உள்ளது. இந்த நிலைமை நீடித்தால், எத்தனை ஆண்டுகளானாலும் அதிமுக ஆட்சி அமைக்க முடியாது என்பதோடு மட்டுமல்லாமல், அதன் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டே செல்லும். வெற்றிக் கனி என்பது எட்டாக் கனியாகிவிடும்’ என்று கூறினார். இதேபோல், ‘சர்வாதிகாரி என்கிற எடப்பாடி அதிமுகவை அழித்துவிடுவார்’ என்று டிடிவி.தினகரன் கூறினார். ‘அதிமுக தற்போது சரியாக இல்லை’ என்று சசிகலாவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் அதிமுகவின் 53வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நெல்லை மாவட்டம் அம்பையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: கடந்த 1972ல் எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம் இன்று 53வது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. எம்ஜிஆர் ஆட்சிக்கு வருவதற்கு முன் பல்வேறு சோதனைகளை சந்தித்தார். அதேபோல் ஜெயலலிதாவும் பல இன்னல்களை சந்தித்தார். அந்த இரு தலைவர்களும் அனைத்து சோதனைகளையும் முறியடித்து ஆட்சிக்கு வந்தார்கள். இதேபோல்தான் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக பொறுப்பேற்றேன். ஆனால் கட்சிக்குள்ளேயே இருக்கும் சில எட்டப்பர்கள் (ஓபிஎஸ், சசிகலா, டிடிவி) சதி திட்டங்களை தீட்டி எனது ஆட்சியை அகற்ற வேண்டும் என நினைத்தார்கள்.
அப்படிப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்து உயர்ந்த பதவிகளை கொடுத்தேன். ஆனால் அவர்கள் இந்த ஆட்சிக்கு எதிராக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக சட்டமன்றத்தில் எதிர்த்து ஓட்டு போட்டார்கள். ஆனால் இன்று அதிமுக வலுவோடு இருக்கிறது. அது இரண்டாக மூன்றாக உடைந்து விட்டது என்று சிலர் வதந்தியை கிளப்புகிறார்கள். அதிமுகவை பலவீனப்படுத்துவதற்காகவும் நான் முதலமைச்சராவதை தடுப்பதற்காகவும் அந்த எட்டப்பர்கள் தொடர்ந்து சதித் திட்டம் தீட்டுகிறார்கள். எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு எதிராக என்ன செய்தார்களோ அதேபாணியில் இப்போதும் இடையூறு செய்கிறார்கள்.
அதிமுக வலிமை குறைந்துவிட்டது என்று ஒரு சில ஊடகங்கள் மதிப்பிடுகிறது. ஆனால் 2019ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலைவிட 2024ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக ஒரு சதவீதம் ஓட்டுகள் கூடுதலாக பெற்றுள்ளது. அதிமுகவுக்கு செல்வாக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாம் சொந்த காலில் நிற்கிறோம், நமக்கு தான் பலம் அதிகம். எனவே வருகிற 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாம் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு தொண்டர்கள், நிர்வாகிகள் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் முதல்வராக பதவியேற்ற நிலையில் அவரை ராஜினாமா செய்ய வைத்து, சசிகலாவால் எடப்பாடி முதல்வராக்கப்பட்டார். ஆனால், தற்போது மக்களால் முதல்வராக்கப்பட்டேன் என்று எடப்பாடி பேசி உள்ளதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..