பாஜக – காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுவதால் அரியானாவில் மீண்டும் ெதாங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் மூன்று கட்டங்களாகவும், அரியானாவில் ஒரு கட்டமாகவும் வாக்குப்பதிவு நடைபெறும். இரு மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அக்டோபர் 4ம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் அட்டவணை வெளியான நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வில் களமிறங்கி உள்ளன.
அரியானாவில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் ஆட்சியை தக்கவைக்குமா? அல்லது ஆட்சியை காங்கிரசிடம் பறிகொடுக்குமா? என்பது குறித்த கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது. ‘டைம்ஸ்நவ்’ மற்றும் ‘மேட்ரிஷ்’ ஆகிய நிறுவனங்கள் நடத்திய சர்வேயின்படி, பாஜக கூட்டணி அதிகபட்சமாக 35.2 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 31.6 சதவீதமும், ஜேஜேபி 12.4 சதவீதமும், மற்றவை 20.8 சதவீத வாக்குகளையும் பெற வாய்ப்புள்ளது. சட்டசபையில் பெரும்பான்மை பலத்திற்கு 46 இடங்கள் தேவை என்ற நிலையில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை.
பாஜக மற்றும் கூட்டணிக்கு 37 முதல் 42 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 33 முதல் 38 இடங்களும், ஜேஜேபி-க்கு 3 முதல் 8 இடங்களும், மற்றவை கட்சிகள் மற்றும் சுயேட்சைகளுக்கு 7 முதல் 12 இடங்களும் கிடைக்க வாய்ப்புள்ளது.
எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத சூழல் ஏற்படும்பட்சத்தில், இம்முறையும் துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜேஜேபி கட்சிக்கு ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு இருக்கும். முதல்வராக நயாப் சிங் சைனியின் செயல்பாடு எப்படி உள்ளது? என்று கேள்விக்கு 40 சதவீதம் வாக்காளர்கள் மிகவும் நன்றாக இருப்பதாகவும், 21 சதவீதம் பேர் சராசரியாகவும், 24 சதவீதம் பேர் சரியில்லை எனவும், 15 சதவீதம் பேர் கருத்து சொல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளனர். துஷ்யந்த் சவுதாலா பற்றி கேட்டபோது, 24 சதவீதம் பேர் தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ பாஜக கூட்டணியில் அவர் சேருவார் என்றும், 44 சதவீதம் பேர் காங்கிரஸுடன் செல்லலாம் என்றும், 22 சதவீதம் பேர் எந்தக் கூட்டணியிலும் அவர் இருக்க மாட்டார் என்றும் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் வேட்பாளராக யார் இருக்க வேண்டும்? என்ற கேள்விக்கு, அதிகபட்சமாக பாஜகவின் நைப் சிங் சைனிக்கு 29 சதவீதமும், காங்கிரசின் பூபேந்தர் சிங் ஹூடாவுக்கு 27 சதவீதமும், ஜேஜேபி-யின் துஷ்யந்த் சவுதாலாவுக்கு 9 சதவீதமும் ஆதரவு கிடைத்தது. விவசாயிகள் பிரச்னை, அக்னிவீர் திட்டம் ஆகியவை அரியானா தேர்தலில் பெரிய பிரச்னையாக இருக்கும் என்று பெரும்பாலான வாக்காளர்கள் கருத்து தெரிவித்தனர். கடந்த முறை அரியானாவில் நடந்த பேரவை தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காததால், ஜேஜேபி மற்றும் சுயேச்சைகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது.
விவசாயிகள் போராட்டம் வெடித்த போது, பாஜக கூட்டணியில் இருந்து ஜேஜேபி வெளியேறியது. தற்போது சுயேச்சைகள் ஆதரவுடன் பாஜக அரசு ஆட்சியை நடத்தி வருகிறது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கூட மொத்தமுள்ள 10 தொகுதிகளில் 5 இடங்களை பாஜகவும், 5 இடங்களை காங்கிரசும் கைப்பற்றியது. எனவே இந்த சட்டசபை தேர்தலில் அரியானா தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகள் போராட்டம் வெடித்த போது, பாஜக கூட்டணியில் இருந்து ஜேஜேபி வெளியேறியது. தற்போது சுயேச்சைகள் ஆதரவுடன் பாஜக அரசு ஆட்சியை நடத்தி வருகிறது.
4 எம்எல்ஏக்கள் திடீர் ராஜினாமா
அரியானா சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) எம்எல்ஏக்கள் 10 பேரில் 4 பேர் (ஈஸ்வர் சிங், ராம்கரன் கலா, தேவேந்திர பாப்லி, அனுப் தனக்) கட்சியில் இருந்து வெளியேறிவிட்டனர். இவர்களில், அனுப் தனக் ஏற்கனவே கட்சியை விட்டு வெளியேறிய நிலையில், ஈஸ்வர் சிங், ராம்கரன் கலா, தேவேந்திர பாப்லி ஆகியோர் நேற்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி மற்றும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளனர்.
இவர்கள் வரும் நாட்களில் பாஜக அல்லது காங்கிரஸில் சேரவாய்ப்புள்ளது. எனவே இந்த தேர்தலில் துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜேஜேபி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்றும், மக்களவை தேர்தலில் ஒரு இடத்தை கூட கைப்பற்றாததால் பெரும் கட்சியின் நிலைமை பலவீனமான நிலையில் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
- டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)The film is written/directed by director Shanmugam Muthusamy. Harish Kalyan, Athulya Ravi are in the lead. டீசல் (Diesel) – தமிழ்… Read more: டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)
- ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்Union Health Secretary releases training packages on public health management of chemical hazards ரசாயன ஆபத்துகள் என்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு… Read more: ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்
- தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை “தூய்மை இயக்கம்” என்ற மாநில அளவிலான இயக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தின் வாயிலாக உருவாக்கப்படும்… Read more: தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..










