காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆலந்தூர் தர்மராசா கோயில் தெருவில் நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு பிரகாஷ் தலைமை வகித்தார். பகுதி இளைஞரணி அமைப்பாளர் கோ.பிரவீன் குமார் வரவேற்றார். பகுதி செயலாளர்கள் குணாளன், என்.சந்திரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜெயராம் மார்த்தாண்டன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமை கழக பேச்சாளர் திண்டுக்கல் லியோனி, எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இரா.கருணாநிதி ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர். தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘இந்தியாவிலேயே 50 லட்சம் இளைஞர்களை கொண்ட பலமான மாநில கட்சியாக திமுக திகழ்கிறது.
ஜெயலலிதா போல் அதிமுகவினரை நடுரோட்டில் விட்டுவிடவில்லை. 75 ஆண்டுகாலம் ஒரே கட்சி, ஒரே சின்னம் என்று திமுக உள்ளது. உதயநிதி சுற்றிசுற்றி இயக்க பணியும் ஆட்சி காலத்தில் பணியும் செய்து வருகிறார். அதிமுகவினருக்கு திராவிட மாடல் என்றாலே எரியுது. திமுக ஆட்சியை எப்படி ஒழிக்க வேண்டும் என தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள். விடியா முகத்துடன் இருப்பதால் விடியா ஆட்சி என்கிறார்கள். தேர்தல் அறிக்கையில் தந்த வாக்குறுதிகளில் 90 சதவீதம் நிறைவேற்றியவர் முதல்வர். சினிமாவை பார்த்து ரசித்து வந்து விடவேண்டும். யாரையும் நினைக்க கூடாது’ என்றார். திண்டுக்கல் லியோனி பேசுகையில், ‘பெண்களை நம்பியதால் முதல்வர் உரிமை தொகையை பெண்கள் கையில் தந்துள்ளார். புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளவர்கள், பாஜ எங்களுக்கு கொள்கை எதிரி. திமுக அரசியல் எதிரி என்கிறார்கள்.
அப்படி என்றால் திமுகவின் கொள்கையை ஏற்று கொள்வீர்களா? தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியை அதிமுக சந்தித்து வருகிறது. அம்பேத்கர் கனவை நிறைவேற்றி வருவது திராவிட மாடல் ஆட்சி. பாஜ, அதிமுக கட்சிகளை 2026ம் ஆண்டு மக்கள் தூக்கி எறிவார்கள்’ என்றார். கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கோடீஸ்வரன், கவுன்சிலர்கள் பிருந்தா , முரளி கிருஷ்ணன், செல்வேந்திரன், சாலமன், வட்ட செயலாளர் கே.பி.முரளி, கிருஷ்ணன், ஜெ.நடராஜன், சீனிவாசன், ஜெகதீஸ்வரன், கருணாநிதி, ரவி மற்றும் கலாநிதி குணாளன், ஆனந்தன், சுகுணா, கார்த்திக்தரணி வேந்தன், தீனதயாளன், உதயா, அபுதாஹீர், காஜா மொய்தீன் உட்பட பழக கலந்து கொண்டனர்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..