இனி ஆக்டோபஸ் அட்டைப்பூச்சி அண்ணாமலை என அழைக்க தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். மதுரை மாவட்டம், சமயநல்லூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று அளித்த பேட்டி: அதிமுகவின் வரலாறு தெரியாத அண்ணாமலை, மன அழுத்தத்தினால் மனநலம் பாதிக்கப்பட்டது போல் பேசியிருக்கிறார். பதவி வெறி, பதவி மோகம், மன அழுத்தத்தினால் சித்தம் கலங்கி, அண்ணாமலைக்கு சித்த பிரம்மை பிடித்திருக்கிறது. எந்த உழைப்பும் இல்லாமல் ஒரு சொட்டு வேர்வை சிந்தாத அண்ணாமலை, ஒரு நல்ல மனநல மருத்துவரை அணுக வேண்டும். அப்படி இல்லை என்றால் நாங்கள் உங்களுக்கு மதுரையில் நல்ல மருத்துவரை ஆலோசனைக்கு அனுப்புகிறோம்.
ஆக்டோபஸ் அட்டைப்பூச்சியின் நஞ்சுக்கு மருந்து கிடையாது. அதுபோல அண்ணாமலையால் தமிழகத்திற்கு எந்த நன்மையும் இல்லை. தமிழகத்திற்கு எந்த வளர்ச்சியும் பெற்று தந்திடாத ஆக்டோபஸ் அண்ணாமலை, தான் சார்ந்த கட்சியை பின்னுக்குத் தள்ளியுள்ளார். ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்திற்கு ஒரு சதவீதம் கூட நிதி ஒதுக்காததற்கு, துப்பு கெட்ட அண்ணாமலை சீறி எழுந்து இருக்க வேண்டாமா? சிறப்பு திட்டங்கள், ரயில்வே திட்டங்களை ஒன்றிய அரசு புறக்கணிப்பு செய்ததற்கு, நிதி ஒதுக்காததற்கு இதுவரை ஏன் அண்ணாமலை வாய் திறக்கவில்லை. சுத்த தமிழனாக இருந்தால் நீங்கள் கர்நாடகாவில் வேலை செய்யாமல் தமிழ்நாட்டில் வேலை செய்திருக்க வேண்டும்.
ஐபிஎஸ் பதவியில் இருக்கும்போது, என் சேவை எப்போதும் தமிழ்நாட்டில்தான் இருக்கும், கர்நாடகாவில் இருக்காது என கூறி இருக்க வேண்டும். இல்லையென்றால் பதவி வேண்டாம் என்று செல்லி இருக்க வேண்டும். பச்சை தமிழன் என சொல்லிக்கொண்டு, பச்சை துரோகியாக கர்நாடகாவில் சேவை செய்து அங்கு தமிழினத்தை கேவலமாக பேசி இன்று பாஜவில் நியமன பதவியை வைத்துக்கொண்டு வாய் சவடால் பேசுகிறார் அண்ணாமலை. கழுதையாக கத்தினாலும் தமிழக மக்கள் உங்களை ஏற்க மாட்டார்கள். உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது. ஒரு கவுன்சிலர் பதவியில் நின்று வெற்றி பெற முடியாதவர் அண்ணாமலை.
நாகரீகமான முறையில் பேசுவதற்கு நீங்கள் யாரிடமும் பயிற்சி எடுக்கவில்லையா?. பகல் கனவு காண்பதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது. நீங்கள் பகல் கனவில் முதல்வராக, பிரதமராக அல்லது அமெரிக்க ஜனாதிபதியாக மாறுவதற்கு உங்களுக்கு உரிமை உள்ளது. கடல் வற்றி கருவாடு திங்கலாம் என்ற காத்திருந்த கொக்கு, கடைசியில் குடல் வற்றி செத்துப்போனது போல, அண்ணாமலையின் முதல்வர் கனவு பறிபோகும். அண்ணாமலையின் பேச்சு தமிழகம் மட்டுமல்ல. உலகத்தில் உள்ள அத்தனை தமிழர்கள் முகத்தையும் சுளிக்கும் வகையில் உள்ளது.
நீங்கள் பதவியேற்ற பிறகு பாஜவில் எந்த தலைவராவது வெளியே தெரிகிறார்களா? பாவம் அந்த அக்கா தமிழிசை இப்போது எல்லாம் வெளியே தெரிவதில்லை. நீங்கள் வகிக்கும் மாநிலத் தலைவர் பதவியை கண்ணியக்குறைவோடு நடத்துகின்ற அளவில் உங்கள் பேச்சு உள்ளது. அதிமுக கட்சியை டெண்டர் கட்சி என்று கூறுகிறீர்கள். ஆனால் உங்கள் கட்சி தான் டெண்டர் கட்சி. உங்கள் கட்சியில் தான் மோசடி கட்ட பஞ்சாயத்து, கொலை, கொள்ளை பின்புலத்தில் உள்ளவர்கள் அடைக்கலமாகி உள்ளனர்.
ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காத அண்ணாமலை, தமிழகத்திற்கு என்னென்ன பெற்றுத் தந்திருக்கிறேன் என்று குறிப்பிடட்டும். நாங்கள் அரசியல் வாழ்க்கையை விட்டு விலகுகிறோம். அதிமுக தொண்டர்கள் இனிமேல் அண்ணாமலையை ‘ஆக்டோபஸ் அட்டைப்பூச்சி அண்ணாமலை’ என்றே அழைக்கலாம் என தீர்மானம் இயற்றுவோம் என்றார். எடப்பாடி உருவபொம்மை எரிப்பு: திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் கடைவீதியில் அதிமுகவினர் அண்ணாமலை உருவபொம்மையையும் போட்டியாக பாஜவினர் எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையையும் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
* பல இடங்களில் உருவ பொம்மை எரிப்பு
எடப்பாடி பழனிசாமி குறித்து, அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்ததை கண்டித்து நேற்று அதிமுக சார்பில் ராமநாதபுரம் பாரதி நகர் பஸ் நிலைய பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணாமலைக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி அவரது உருவ பொம்மையை எரித்தும், அவரது உருவப்படத்தை கிழித்தும், எதிர்ப்பை தெரிவித்தனர். இதேபோல நெல்லை கொக்கிரகுளம், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய இடங்களிலும் அதிமுகவினர் அண்ணாமலை உருவபொம்மையை எரித்தனர். இதேபோல தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் அண்ணாமலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தலைவர் பதவி பறிபோகும் என அச்சத்தில் பேசுகிறார்: கே.பி.முனுசாமி தாக்கு
அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ நேற்று கிருஷ்ணகிரியில் அளித்த பேட்டி: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை மக்களை சந்திக்காமல் ஊடகம் மற்றும் பத்திரிகையாளர்களை சந்தித்து அரசியல் நடத்துகிறார். தன்னுடைய மாநில தலைவர் பதவி பறிக்கப்படுமோ என்ற அச்சத்தில், லண்டனுக்கு படிக்க செல்கிறேன் என்றும், தான்தோன்றித்தனமாகவும் பேசுகிறார். தனக்கு தலைமை பொறுப்பு தொடர்ந்து இருக்காது என்ற பயம் அண்ணாமலைக்கு வந்து விட்டது. அதனால், இருக்கின்ற வரை, ஏதாவது கருத்துக்களை சொல்லி விட்டு போகலாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இதனை நிச்சயமாக அக்கட்சியின் தலைமையில் இருப்பவர்கள் உணர்ந்து, விரைவில் அவரை மாநில தலைமை பொறுப்பில் இருந்து வெளியேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். திராவிட கட்சிகளை ஒழிப்போம் என அண்ணாமலை பேசுகிறார். கடந்த 1967 முதல் திராவிட கட்சிகள் மட்டுமே தமிழகத்தை ஆள்கிறது என்பது அவருக்கு புரியவில்லை. இந்திய அளவில், பாஜ ஆளும் மற்ற மாநிலங்களை விட, திராவிட கட்சிகள் ஆளும் தமிழகம், அனைத்து துறைகளிலும் முதலிடத்தில் உள்ளது என்பதை அண்ணாமலை உணரவேண்டும் என்றார்.
* 7 பக்கங்களில் எழுதி வைத்து சாடல்
ஆர்.பி.உதயகுமார் அண்ணாமலை குறித்து விமர்சிப்பதற்காக 7 பக்கங்கள் வரை எழுதி வைத்து, அவ்வப்போது பார்த்து விமர்சனங்களை முன் வைத்தார்.
- டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)The film is written/directed by director Shanmugam Muthusamy. Harish Kalyan, Athulya Ravi are in the lead. டீசல் (Diesel) – தமிழ்… Read more: டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)
- ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்Union Health Secretary releases training packages on public health management of chemical hazards ரசாயன ஆபத்துகள் என்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு… Read more: ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்
- தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை “தூய்மை இயக்கம்” என்ற மாநில அளவிலான இயக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தின் வாயிலாக உருவாக்கப்படும்… Read more: தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..










