பாஜவுக்கு ஆதரவு தரவில்லை என்றால் ஓபிஎஸ், டிடிவி சிறை செல்வது உறுதி என்று மாஜி அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரை பழங்காநத்தத்தில் மாஜி அமைச்சர் உதயகுமார் தலைமையில் நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. மாஜி அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ துவக்கி வைத்தனர். மாலையில் உண்ணாவிரதத்தை மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் முடித்து வைத்தனர்.
இதில், திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: ஓபிஎஸ் மற்றும் டிடிவி.தினகரனால் அதிமுகவை அசைக்க முடியவில்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு நான் தான் என பேசிய ஓபிஎஸ், அவரது சக்தியை அவரே நிரூபித்து விட்டார். ராமநாதபுரத்தில் அதிமுகவை எதிர்த்து நின்று தோற்றுப்போனார். ஜெயலலிதாவை காப்பாற்றியது நாங்கள் தான் என பேசிய டிடிவி.தினகரனும் தேர்தலில் நின்று தோற்றார். இவர்கள் தோல்வியடைந்து செல்லாக்காசுகளாகி விட்டார்கள். டிடிவி.தினகரன், 2026 தேர்தலில் அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி முடிவுரை எழுதுவார் என்று கூறியுள்ளார். இதைச் சொல்ல அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?
ஜெயலலிதா வீட்டில் வேலை பார்த்த குடும்பமான டிடிவி.தினகரன், நான் தான் சொந்தம் என்று ஜெயலலிதா பெயரில் கட்சி ஆரம்பிக்கிறார். ஓபிஎஸ் அதிமுகவை எதிர்த்து நின்று பெரிய சூழ்ச்சி செய்தார். தற்போது சேர்க்க வேண்டும் என்கிறார். அவருக்கு வெட்கம், மானம், சூடு சொரணை இல்லையா? இவர்கள் புலி, சிங்கம் என்று நீங்கள் நினைக்க வேண்டாம். அனைவரும் பூஜ்ஜியம் தான். இன்றைக்கு லண்டன் வழக்கில் இருந்து தப்பிக்க ஒன்றிய அரசுடன் டிடிவி.தினகரன் இணக்கமாக உள்ளார். மூன்று முறை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். அவர் மீது சொத்து வழக்கு உள்ளது. அதிலிருந்து தப்பிக்க பாஜகவிற்கு பின்னால் உள்ளார். ஒன்றிய பாஜவிற்கு ஆதரவாக இருந்தால் தான் கேட்டது கிடைக்கும். எதிராக இருந்தால் அவர்கள் சிறைக்குத்தான் அனுப்புவார்கள். இவ்வாறு பேசினார்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..