தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நாடாளுமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், இன்று (22-01-2024) மாலை 5.00 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஜனவரி-21 அன்று சேலத்தில் நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணி 2வது மாநில மாநாட்டில் எழுச்சியுரையாற்றும்போது தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் வழங்கிய அறிவுரையின்படி, நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட நிர்வாகிகளான பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட/ பகுதி/ ஒன்றிய/ நகர/ பேரூர் கழகச் செயலாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் மண்டலக்குழுத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள், நகர்மன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழுத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட “நிர்வாகிகள் சந்திப்பு” கீழ்க்கண்ட அட்டவணைப்படி. சென்னை, அண்ணா சாலை, “அண்ணா அறிவாலயத்தில்” நடைபெறும்.
24.01.2024 – மாலை 3.00 மணி – கிருஷ்ணகிரி, திருவள்ளூர்
27.01.2024 – காலை 9.00 மணி – பொள்ளாச்சி, கோவை
27.01.2024 – மாலை 3.00 மணி – நீலகிரி, திருப்பூர்
28.01.2024 – காலை 9.00 மணி – நாமக்கல், ஈரோடு
28.01.2024 – மாலை 3.00 மணி – சேலம், தருமபுரி
29.01.2024 – காலை 9.00 மணி – சிவகங்கை, விருதுநகர்
29.01.2024 – மாலை 3.00 மணி – தென்காசி, திருநெல்வேலி
30.01.2024 – காலை 9.00 மணி – தூத்துக்குடி, கன்னியாகுமரி
30.01.2024 – மாலை 3.00 மணி – மதுரை, தேனி
31.01.2024 – காலை 9.00 மணி – இராமநாதபுரம், கடலூர்
01.02.2024 – காலை 9.00 மணி – சிதம்பரம், மயிலாடுதுறை
01.02.2024 – மாலை 3.00 மணி – நாகப்பட்டினம், தஞ்சாவூர்
02.02.2024 – காலை 9.00 மணி – வேலூர், அரக்கோணம்
02.02.2024 – மாலை 3.00 மணி – விழுப்புரம், கள்ளக்குறிச்சி
03.02.2024 – காலை 9.00 மணி – வடசென்னை, தென் சென்னை
03.02.2024 – மாலை 3.00 மணி – மத்திய சென்னை, திருபெரும்புதூர்
04.02.2024 – காலை 9.00 மணி – திருவண்ணாமலை, ஆரணி
04.02.2024 – மாலை 3.00 மணி – பெரம்பலூர், திருச்சி
05.02.2024 – காலை 9.00 மணி – கரூர், திண்டுக்கல்
05.02.2024 – மாலை 3.00 மணி – காஞ்சிபுரம், புதுச்சேரி
குறிப்பு: அந்தந்த நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு முன்பாகவே நிர்வாகிகள் அரங்கத்திற்குள் வந்து அமர்ந்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.