தமிழகத்தில் கூட்டணி குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்க கூடாது என்று பாஜவினருக்கு அக் கட்சியின் மேலிட இணை பொறுப்பாளர் அறிவுறுத்தியுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜ இடம் பெற்றது. இரண்டு கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் கூட்டணி முறிந்தது. தொடர்ந்து மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான ஒரு கூட்டணியும், பாஜ தலைமையிலான ஒரு கூட்டணியும் தேர்தலை சந்தித்தது. இதில் 2 கூட்டணிகளும் மக்களவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இறங்கியுள்ளது.
இந்த நிலையில் வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜ இடம் பெறப்போவதாக ஒரு தகவல் வெளியானது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பதில் அளித்தால், 2026 சட்டப்பேரவை தேர்தல் மட்டுமல்ல, எந்த தேர்தலிலும் பாஜவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்” என்று அறிவித்தார். தொடர்ந்து இதையே அவர் வலியுறுத்தி வருகிறார். அதேநேரத்தில் டெல்லி மேலிடம் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் பாஜவில் கூட்டணி குறித்து யாரும் பேச வேண்டாம் என்று பாஜ மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: பாஜவினர் உறுப்பினர் சேர்க்கையை விரிவுபடுத்தி, அமைப்பு தேர்தலை வெற்றிகரமாக நடத்தி கட்சியை வலுப்படுத்துவதே முதன்மையான கவனமாக இருக்க வேண்டும். தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல லட்சம் கோடி மதிப்பிலான மத்திய அரசின் எண்ணற்ற திட்டங்களை முன்னிலைப்படுத்தி, மோடியின் நலத்திட்டங்களை மக்களுக்கு விளக்க வேண்டும். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணிப் பிரச்னைகள், மாற்றுக் கட்சி உத்திகள் அல்லது தலைவர் நடவடிக்கைகள் குறித்து ஊடகங்கள், சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். மாநில தலைமையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும். மேலும் அங்கீகரிக்கப்பட்ட மூத்த தலைவர்கள் மட்டுமே முக்கியமான விஷயங்களில் கருத்து தெரிவிக்க வேண்டும். தமிழக பாஜவின் கூட்டணி குறித்து இப்போது கருத்து சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. அது தேவையற்றது. தேர்தல் நேரத்தில் தேசிய மற்றும் மாநில தலைவர்கள் கூட்டணி விவகாரங்கள் குறித்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..