மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் இந்தியா நேற்று ஒரே நாளில் 4 பதக்கங்களை அள்ளியது. துப்பாக்கிசுடுதல் வீராங்கனை அவனி லெகரா தொடர்ந்து 2வது முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்து வரும் இந்த தொடரின் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் (எஸ்எச்1) பிரிவில் பங்கேற்ற அவனி லெகரா (22 வயது) 249.7 புள்ளிகள் குவித்து புதிய சாதனையுடன் முதலிடம் பிடித்தார். இவர் ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக்கிலும் தங்கப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது (249.6 புள்ளி). இதன் மூலம் பாராலிம்பிக்கில் தொடர்ச்சியாக 2 தங்கப் பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் அவனி வசமானது.
கொரியாவின் லீ யுன்ரி (246.8 புள்ளி) 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை மோனா அகர்வால் (228.7) வெண்கலப் பதக்கத்தை முத்தமிட்டார். பாராலிம்பிக் துப்பாக்கிசுடுதல் வரலாற்றில், ஒரே பிரிவில் இந்தியா 2 பதக்கங்கள் வெல்வது இதுவே முதல் முறையாகும். மணிஷுக்கு வெள்ளி: ஆண்கள் 10 மீ. ஏர் பிஸ்டல் எஸ்எச்1 பைனலில் களமிறங்கிய இந்திய வீரர் மணிஷ் நர்வால் 234.9 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். தென் கொரியாவின் ஜோ ஜியாங்டு (237.4) தங்கம், சீனாவின் யாங் சவோ (214.3) வெண்கலம் வென்றனர். மணிஷ் நர்வால் டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். பாராலிம்பிக்கில் தொடர்ச்சியாக 2 பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமை நர்வாலுக்கு கிடைத்துள்ளது.
பிரீத்தி அசத்தல்: மகளிர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் (டி35) இந்திய வீராங்கனை பிரீத்தி பால் (23 வயது) 14.21 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து வெண்கலப் பதக்கம் பெற்றார். இந்த போட்டியில் முதல் 2 இடங்களைப் பிடித்த சீனாவின் ஸோ ஜியா (13.58 விநாடி) தங்கப் பதக்கமும், குவோ கியான்கியான் (13.74 விநாடி) வெள்ளிப் பதக்கமும் வென்றனர். அவனி வென்ற தங்கப் பதக்கத்துடன் பாரிஸ் பாராலிம்பிக் பதக்க வேட்டையை தொடங்கிய இந்தியா, ஒரே நாளில் 4 பதக்கங்களை கைப்பற்றி டாப்-10ல் இடம் பிடித்துள்ளது.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..