கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் முதலில் பந்துவீச முடிவு செய்தார். நடப்பு சீசனில் அவர் முதல் முறையாக டாஸ் வென்றது குறிப்பிடத்தக்கது. சால்ட், நரைன் இணைந்து கேகேஆர் இன்னிங்சை தொடங்கினர். தேஷ்பாண்டே வீசிய முதல் பந்திலேயே சால்ட் டக் அவுட்டாகி நடையைக் கட்ட, கொல்கத்தாவுக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.
எனினும், நரைன் – ரகுவன்ஷி ஜோடி 2வது விக்கெட்டுக்கு அதிரடியாக 55 ரன் சேர்த்தது. ஜடேஜா வீசிய 7வது ஓவரில் ரகுவன்ஷி 24 ரன் (18 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்), நரைன் 27 ரன் (20 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுக்க, கொல்கத்தா திடீர் சரிவை சந்தித்தது. அடுத்து வந்த வெங்கடேஷ் 3 ரன் மட்டுமே எடுத்து ஜடேஜா பந்துவீச்சில் மிட்செல் வசம் பிடிபட, கேகேஆர் 8.2 ஓவரில் 64 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது. ரமன்தீப் சிங் 13 ரன் எடுத்து போல்டானார். அதிரடி வீரர்கள் ரிங்கு சிங் 9 ரன், ரஸ்ஸல் 10 ரன் எடுத்து தேஷ்பாண்டே வேகத்தில் பெவிலியன் திரும்பினர். முஸ்டாபிசுர் வீசிய கடைசி ஓவரில் ஷ்ரேயாஸ் 34 ரன் (32 பந்து, 3 பவுண்டரி), மிட்செல் ஸ்டார்க் (0) விக்கெட்டை பறிகொடுத்தனர். கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன் சேர்த்தது.
அனுகுல் 3 ரன், வைபவ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சிஎஸ்கே பந்துவீச்சில் ஜடேஜா, தேஷ்பாண்டே தலா 3, முஸ்டாபிசுர் 2, தீக்ஷனா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய சூப்பர் கிங்ஸ் 17.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ருதுராஜ் கெய்க்வாட் அதிகபட்சமாக 67 ரன் (58 பந்து, 9 பவுண்டரி) விளாசினார். மிச்சல் 25 ரன், சிவம் துபே 28 ரன் எடுத்தனர். கொல்கத்தா பந்துவீச்சில் வைபவ் அரோரா 2 விக்கெட், சுனில் நரைன் 1 விக்கெட் வீழ்த்தினர். சென்னை சூப்பர் கிங்ஸ் 5 போட்டியில் 3வது வெற்றியை பதிவு செய்ததுடன் ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்தது. அதே சமயம் ஹாட்ரிக் வெற்றியுடன் உற்சாகமாக இருந்த கொல்கத்தா அணி, நடப்பு சீசனில் முதல் தோல்வியை சந்தித்தது.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..