ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்றைய ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கடந்த சீசனில் இறுதிப் போட்டியில் மோதிய இரண்டு அணிகளும் தற்போது மீண்டும் பல பரீட்சை நடத்துகின்றன. 2 அணிகளின் கேப்டன்கள் புதுமுகம் என்பதால், அனைவரின் எதிர்பார்ப்பும் இன்றைய போட்டியின் மீது இருக்கிறது. பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை தங்களது சொந்த மண்ணில் வீழ்த்திய உத்வேகத்துடன் குஜராத் அணி, சிஎஸ்கே வை சந்திக்கிறது.
சிஎஸ்கேவை பொறுத்தவரை ஆர் சி பி ஐ, எளிதாக வீழ்த்தி 2வது வெற்றியை பெற வேண்டும் என்ற உத்வேகத்தில் குஜராத்தை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் தலா 5 முறை இதுவரை ஐபிஎல் தொடரில் மோதி உள்ளனர். இதில் குஜராத் அணி 3 முறையும் சிஎஸ்கே அணி 2 முறையும் வெற்றி பெற்று இருக்கிறது. இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் காயம் காரணமாக முதல் போட்டியில் களமிறங்காத பதிரானா தற்போது முழு உடல் தகுதியை பெற்று உள்ளார் என்ற செய்தி வெளியாகியிருக்கிறது. இதனால் அவர் அணிக்கு திரும்பினால் யாரை வெளியேற்றுவது என்ற குழப்பம் ஏற்படும். காரணம் முஸ்தபிசுர் ரஹ்மான் முதல் போட்டியில் சிஎஸ்கேவுக்காக நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இதேபோன்று குஜராத் அணியில் 4 தமிழக வீரர்கள் மற்றும் தமிழக ரஞ்சி அணியில் இடம் பெற்றுள்ள ஒரு கேரள வீரரும் இடம் பிடித்திருக்கிறார்கள். இந்த 5 வீரர்களுக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் எவ்வாறு செயல்படுவது என்பது நன்கு தெரியும். சாய் சுதர்சன், ஷாருக்கான், விஜய் சங்கர், சாய் கிஷோர், சந்தீப் வாரியார் போன்ற வீரர்கள் சென்னை ஆடுகளத்தில் விளையாடிய அனுபவம் நிச்சயம் குஜராத் அணிக்கு கை கொடுக்கும். இதனால் குஜராத் அணி இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும் குஜராத் அணியில் உள்ள மோகித் சர்மா முன்னாள் சிஎஸ்கே வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிஎஸ்கே அணியை பொறுத்தவரை வேகப்பந்து வீச்சு மிகவும் குறையாக பார்க்கப்படுகிறது. துஷர் தேஷ் பாண்டே ரன்களை முதல் போட்டியில் வாரி வழங்கினார். இதனால் அவரை தோனி சேர்ப்பாரா இல்லை சர்துல் தாக்கூரை அணியில் சேர்ப்பதா? என்ற விவாதம் எழுந்துள்ளது. சமபலம் வாய்ந்த இரு அணிகள் மோதுவதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..