ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 2வது தகுதிச் சுற்று ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. சென்னையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றிப் பெறும் அணி நாளை மறுநாள் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா அணியுடன் மோதும். சென்னை எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் முதல் முறையாக இரு அணிகளும் மோத உள்ளன. பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஐதராபாத் அணி நடப்புத் தொடரில் அதிக ரன் குவிக்கும் அதிரடி அணியாக இருக்கிறது. முதல் தகுதிச் சுற்றிலேயே வென்று நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு செல்லும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த அளவுக்கு அதிரடியாக ரன் குவிக்கும் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, கிளாஸன் ஆகியோருடன், நடராஜன், வியாஸ்காந்த், திரிபாதி, நிதிஷ் ரெட்டி தங்கள் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
எனவே கொல்கத்தாவிடம் விட்டதை பிடிக்க இன்றைய ஆட்டத்தில் ஐதராபாத் மீண்டும் அதிரடியில் இறங்கும். கூடவே இறுதி ஆட்டத்துக்கு முன்னேற கூடுதல் முனைப்பு கூட்டும். அதே வேகத்தில் இருக்கிறது சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான். அந்த அணி நடப்புத் தொடரில் முதல் 2இடங்களில் ஒன்றை பிடிக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் கடைசி 5 ஆட்டங்களில் ஒன்றில் கூட வெற்றி பெற முடியாமல் தடுமாறியது. ஆனாலும் ஏற்கனவே கிடைத்த வெற்றிகள் மூலம் 3வது இடம் உறுதியானது.
அதனால் கிடைத்த வாய்ப்பால், நேற்று முன்தினம் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் பெங்களூர் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நீண்ட நாட்களுக்கு பிறகு வெற்றியை சுவைத்துள்ளது. ஏப்.27ம் தேதி லக்னோவை வீழ்த்திய பிறகு வெற்றி கிடைத்துள்ளது. அதாவது ராஜஸ்தானுக்கு மே மாதத்தில் கிடைத்த ஒரே வெற்றி இதுதான் அதன் மூலம் தகுதிச் சுற்று 2ல் இன்று விளையாட இருக்கிறது. ஜோஸ் பட்லர் இல்லாதது பின்னடைவாக இல்லை. அதனால் இன்றைய ஆட்டத்தில் யாஷ்வி, ரியான், டாம், ஹெட்மயர், அஷ்வின், சாஹல் ஆகியோர் பொறுப்புணர்ந்து விளையாடக் கூடும்.அஷ்வின், நடராஜன் இருவருக்கும் சொந்தக்களம் சென்னை. அதனால் மற்றவர்களை விட இருவருக்கும் பொறுப்பு அதிகம். எப்படி இருந்தாலும் இரு அணிகளும் ‘பைனல்’ இலக்கில் வேகம் காட்டும். அதனால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..