பிசிசிஐ சார்பில் 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் நடத்தப்படும் லீக் தொடர்களில் ஐபிஎல் தான் முதன்மையானதாக விளங்குகிறது. இதற்கு காரணம் ஐசிசி தொடர்களை விட அதிக அளவில் கிடைக்கும் வருவாய்தான். மற்ற தொடர்களை விட ஐபிஎல்லில் வீரர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கிடைக்கிறது. விளம்பர வருவாயும் ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ரசிகர்கள் மத்தியில் ஐபிஎல்லுக்கு இருக்கும் மவுசுதான் இதற்கு காரணம். இந்நிலையில் 17வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கத்தில் அன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
முதல் போட்டிக்கு முன்பாக மாலை 6.30 மணி முதல் கண்கவர் தொடக்க விழா நடக்கிறது. ஏஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியுடன் நடிகர்கள் அக்ஷய் குமார், டைகர் ஷெராப், பின்னணி பாடகர் சோனு நிகம் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்று ரசிகர்களை மகிழ்விக்க உள்ளனர். தொடக்க விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என தெரிகிறது. புதிய சீசனுக்காக 10 அணிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக்பாண்டியா , சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு பாட் கம்மின்ஸ்சும் புதிய கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மற்ற 8 அணிகளும் கடந்த சீசன் கேப்டன்கள் தலைமையிலேயே களம் காண்கின்றன. முதல் போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த ஒருவாரமாக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கேப்டன் டோனி, ஜடேஜா, ஷிவம்துபே, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி உள்ளிட்ட அனைத்து வீரர்களுடன் புதிதாக ஷர்துல் தாகூர்,ரச்சின் ரவீந்திரா ,டேரில் மிட்செல் இணைந்துள்ளனர்.
டூபிளசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணியினர் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் கடந்த சில நாட்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவந்தனர்.முன்னணி வீரரான விராட் கோஹ்லி கடந்த 2 நாட்களுக்கு முன் அணியுடன் இணைந்தார். நேற்று மகளிர் பிரீமியர் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்ற பெங்களூரு அணி வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. பின்னர் அணி வீரர்கள் அனைவரும் குரூப் போட்டோ எடுத்துக்கொண்டனர். இந்நிலையில், முதல்போட்டிக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் இன்று அதிகாலை சென்னை வந்தடைந்தனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கேப்டன் டூபிளசிஸ், விராட் கோஹ்லி உள்ளிட்ட அனைவரும் இன்று மாலை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடுகின்றனர். முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று முன்தினம் ஆன்லைனில் தொடங்கிய நிலையில் சில மணிநேரத்திலேயே விற்றுதீர்ந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..