ஐபிஎல் தொடரின் 17வது சீசன் பிளே ஆப் சுற்று எலிமினேட்டர் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. நடப்பு தொடரின் முதல்பாதி லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய ராஜஸ்தான் அணி, முதலில் விளையாடிய 9 ஆட்டங்களில் 8 வெற்றிகளை வசப்படுத்தி அசத்தியது.
தொடர்ச்சியாக 4 வெற்றி, 5வது போட்டியில் தோல்வி, அதைத் தொடர்ந்து மீண்டும் தொடர்ச்சியாக 4 வெற்றி என மிரட்டிய சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, அதன் பிறகு தொடர்ச்சியாக 4 தோல்விகளையும் பதிவு செய்தது. கொல்கத்தாவுடன் விளையாட இருந்த கடைசி லீக் ஆட்டம் கனமழை காரணமாக ரத்தானதை அடுத்து, 17 புள்ளிகள் பெற்று சன்ரைசர்சுடன் சமநிலை வகித்தாலும் மொத்த ரன் ரேட் அடிப்படையில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது.
இதையடுத்து, பிளே ஆப் சுற்றின் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) ஆட்டத்தில் இன்று டு பிளெஸ்ஸி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சவாலை எதிர்கொள்கிறது. வலுவான அணி, அனைத்து வீரர்களும் பார்மில் இருக்கிறார்கள் என்றாலும்… ஒருங்கிணைந்து விளையாட முடியாமல் தடுமாறுவது ராயல்ஸ் அணியின் பலவீனமாக உள்ளது.
ராஜஸ்தான் அணி லீக் சுற்றின் தொடக்கத்தில் வெற்றிகளைக் குவித்து இறுதிக் கட்டத்தில் தொடர் தோல்விகளை சந்தித்தது என்றால், ஆர்சிபி அணியின் பயணம் அப்படியே தலைகீழாக இருந்தது. அந்த அணியால் முதலில் விளையாடிய 8 போட்டியில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற முடிந்தது. அதிலும் தொடர்ச்சியாக 6 தோல்விகளை பெற்றபோது, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற ஒரு சதவீத வாய்ப்பு கூட இல்லை என்றே கணிக்கப்பட்டது.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் போராடி மீண்ட ஆர்சிபி தொடர்ச்சியாக 6 வெற்றிகளுடன் 4வது இடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. அதிலும், நடப்பு சாம்பியன் சென்னைக்கு எதிராக விளையாடிய கடைசி லீக் ஆட்டத்தில் கடும் நெருக்கடியை சமாளித்து 27 ரன் வித்தியாசத்தில் வென்று அமர்க்களப்படுத்தியது. அமகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30க்கு தொடங்கி நடைபெற உள்ள எலிமினேட்டரில் தோற்கும் அணி பரிதாபமாக வெளியேற வேண்டியிருக்கும். ஜெயிக்கும் அணிக்கு இன்னும் 2 சவால்கள் காத்திருக்கின்றன. கொல்கத்தா – ஐதராபாத் அணிகளிடையே நடக்கும் குவாலிஃபயர்-1ல் தோற்ற அணியுடன் குவாலிஃபயர் 2 ஆட்டத்தில் அந்த அணி மோத வேண்டும்.
மொத்தத்தில் எலிமினேட்டர், குவாலிபயர்-2, பைனல் என ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்தினால் மட்டுமே கோப்பையை முத்தமிட முடியும் என்ற நெருக்கடியில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் உள்ளன. இப்போதைக்கு எலிமினேட்டர் என்ற காலிறுதியில் வென்று குவாலிஃபயர்-2 என்ற அரையிறுதிக்கு முன்னேறுவது மட்டுமே இந்த அணிகளின் இலக்கு. வாழ்வா… சாவா? ஆட்டமாக அமைந்துள்ள இன்றைய எலிமினேட்டரில் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..