புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கும், முதலீடுகளை அதிகரிப்பதற்கும் வலுவான சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு 2016 ஜனவரி 16 அன்று புத்தொழில் இந்தியா முன்னெடுப்பைத் தொடங்கியது.
நாட்டில் ஒரு துடிப்பான புத்தொழில் சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான திட்டங்கள், ஊக்கத்தொகைகளை உள்ளடக்கிய புத்தொழில் நிறுவனங்களுக்கான செயல் திட்டத்தை அரசு வெளியிட்டது. இந்தச் செயல் திட்டம் “எளிமைப்படுத்துதல், கையாளுதல்”, “நிதி ஆதரவு, ஊக்கத்தொகை”, “தொழில்துறை கல்விக் கூட்டாண்மை, தொழில் காப்பகம்” போன்ற பகுதிகளுடன் 19 செயல் வகைகளை உள்ளடக்கியது. செயல் திட்டத்தின் குறிப்பிட்ட நோக்கங்களை அடைவதற்காக, புத்தொழில் இந்தியா முன்னெடுப்பின் கீழ் புத்தொழில் சூழல் அமைப்பை அங்கீகரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும், அதிகாரமளிப்பதற்கும் பல்வேறு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்படுகின்றன.
புத்தொழில் இந்தியா முன்னெடுப்பின் கீழ், புத்தொழில் நிறுவனங்களுக்கான நிதி , புத்தொழில் இந்தியா தொடக்க நிதித் திட்டம், புத்தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் ஆகிய மூன்று முன்னோடித் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
தொடக்க நிலை புத்தொழில் நிறுவனங்களுக்கு தொழில் காப்பகங்கள் மூலம் புத்தொழில் இந்தியா தொடக்க நிலை நிதி உதவி வழங்கப்படுகிறது. புத்தொழில் இந்தியா தொடக்க நிலை நிதியத்தில் ரூ.945 கோடி மூலதனம் உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில், மொத்தம் ரூ.86.10 கோடி அளவிற்கு 20 தொழில் காப்பகங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட தொழில் காப்பகங்களுக்கு 2023 டிசம்பர் 31 வரை ரூ.43.63 கோடி வழங்கப்பட்டுள்ளது.
புத்தொழில் நிறுவனங்களுக்கான நிதியம் மூலதன முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக நிறுவப்பட்டு, இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியால் செயல்படுத்தப்படுகிறது. இது இந்திய பங்குப் பரிவர்த்தனை வாரியத்தில் மாற்று முதலீட்டு நிதியாக மூலதனத்தை அளித்து புத்தொழில் நிறுவனங்களுக்கு முதலீடாக அளிக்கிறது. புத்தொழில் நிறுவனங்களுக்கான நிதியத்தில் ரூ.10,000 கோடி மூலதனம் உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கி மொத்தம் ரூ.500 கோடியை 6 மாற்று முதலீட்டு நிதியத்திற்கு வழங்க முடிவு செய்துள்ளது. 2023 டிசம்பர் 31 வரை மாற்று முதலீட்டு நிதியத்திற்கு ரூ.384 கோடி வழங்கியுள்ளது.
தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்கள் மூலம் புத்தொழில் நிறுவனங்களை அங்கீகரிக்க உள்நாட்டு வர்த்தகம், தொழில் மேம்பாட்டுத் துறைக்கு பிணையமில்லா கடன்களை வழங்குவதற்காக புத்தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. புத்தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டம் தேசியக் கடன் உத்தரவாத அறங்காவலர் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. 2023 ஏப்ரல் 1 முதல் முன்னோட்ட அடிப்படையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2023 டிசம்பர் 31 நிலவரப்படி, தகுதியான அங்கீகரிக்கப்பட்ட 5 புத்தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.8.65 கோடி மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட நோக்கங்களை அடைவதற்காக, புத்தொழில் இந்தியா முன்னெடுப்பின் கீழ் பல்வேறு திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்படுகின்றன. இந்த முன்னெடுப்பின் கீழ் தமிழ்நாடு உட்பட மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், நகரங்கள், சிறிய நகரங்கள் கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படுகிறது.
அரசின் தொடர்ச்சியான முயற்சிகள் மூலம் புத்தொழில் இந்தியா முன்னெடுப்பின் கீழ், உள்நாட்டு வர்த்தகம், தொழில் மேம்பாட்டுத் துறையால் 2016-ம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட 300-க்கும் அதிகமான புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையை 2023 டிசம்பர் 31 நிலவரப்படி 1,17,254 ஆக அதிகரிக்க வழிவகுத்தது. குறிப்பாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2023 டிசம்பர் 31 நிலவரப்படி மொத்தம் 7,559 புத்தொழில் நிறுவனங்கள் உள்நாட்டு வர்த்தகம், தொழில் மேம்பாட்டுத் துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை தொழில், வர்த்தகத்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
- டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)The film is written/directed by director Shanmugam Muthusamy. Harish Kalyan, Athulya Ravi are in the lead. டீசல் (Diesel) – தமிழ்… Read more: டீசல் (Diesel) – தமிழ் திரைப்பட விமர்சனம் (2025)
- ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்Union Health Secretary releases training packages on public health management of chemical hazards ரசாயன ஆபத்துகள் என்பது பொது சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு… Read more: ரசாயன ஆபத்துகளில் பொது சுகாதார மேலாண்மை குறித்த பயிற்சித் தொகுப்புகளை மத்திய சுகாதார செயலாளர் வெளியிட்டார்
- தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை “தூய்மை இயக்கம்” என்ற மாநில அளவிலான இயக்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. இவ்வியக்கத்தின் வாயிலாக உருவாக்கப்படும்… Read more: தமிழ்நாடு முழுவதும் திடக்கழிவு மேலாண்மையை வலுப்படுத்திட “தூய்மை இயக்கம்”!..
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..










