அதிமுக-விற்கு கழகமே குடும்பம் என்றும், திமுகவிற்கு குடும்பமே கழகம் என்றும் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
அதிமுக தலைமையில் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும் என முன்னாள் டிஅமைச்சர் கூறியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், அவர் தொடர்ந்த அவதூறு வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் சாட்சி விசாரணைக்காக ஆஜராகி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் 17 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்தன காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்த திமுக மாநில உரிமைக்காக எதையுமே செய்து கொடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
1998 ஆம் ஆண்டு காவேரி நீரை பெற்று தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தமிழக விவசாயிகள் நலன் கருதி பாஜக உடனான கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சி அதிமுக என்றும்,மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்த திமுக தமிழகத்துக்காக என்ன செய்தது எனவும் கேள்வி எழுப்பினார்.
பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகளே உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக உள்ள போது, தமிழகத்தில் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஏன் கொண்டு வரக்கூடாது எனவும், தமிழை வழக்காடு மொழியாக கொண்டுவர என்ன நடவடிக்கையை இந்த விடியா திமுக அரசு எடுத்துள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்.
மத்தியில் உள்ள பாஜக அரசு தமிழகத்தின் நலனுக்காக எவ்வித திட்டங்களையும் கொண்டு வரவில்லை என குற்றம் சாட்டிய அவர், அதிமுக ஆட்சியின் போது இயற்கை பேரிடரை சமாளிப்பதற்காக ஒரு லட்சத்து 18 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு தொகை கேட்டதாகவும், ஆனால் பாஜக அரசு 6000 கோடி மட்டுமே நிதி ஒதுக்கியதாகவும் வேதனை தெரிவித்தார்.
தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து நேற்று அதிமுக நடத்திய வெற்றிகரமான போராட்டத்தை திசை திருப்பவே ஆளுநர் கால்டுவெல் பற்றியும், ஜி யு போப் பற்றியும் தவறான தகவல்களை கூறி வருவதாக குற்றம் சாட்டிய முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், இதிலிருந்து ஆளுநருக்கும் திமுக விற்கும் இடையேயான உறவு என்னவென்று தெரிந்து கொள்ள முடிகிறது என்றும் விமர்சித்தார்….
தமிழகத்தில் குடும்ப அரசியல் நடப்பதாக பிரதமர் மோடி விமர்சித்து உள்ளாரே என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், கழகத்தில் அனைவரும் குடும்பம் போல பழகி வருகிறோம் எனவே அதிமுகவை பொருத்தவரை கழகமே குடும்பம், ஆனால் திமுகவை பொருத்தவரை குடும்பமே கழகம் என்றும்,பிரதமர் மோடி கூறிய குடும்ப அரசியல் திமுகவுக்கு தான் பொருந்தும் கழகத்திற்கு பொருந்தாது என்றும் தெரிவித்தார்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..