பாஜக கூட்டணியில் அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. 2 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. அனைத்துக் கட்சிகளும் மக்களவைத் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பங்கீடு செய்து, இன்று வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுவிட்டது.
அதேசமயம், அதிமுக, பாஜக கூட்டணிகள் கிட்டத்தட்ட இறுதியாகிவிட்டன. இன்று மாலை அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவடைய உள்ளது. இன்று முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துள்ளது அதிமுக. பாஜகவும், கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாஜக கூட்டணியில் அமமுக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை – அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இருவரும் இன்று தொகுதிப் பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். எனினும், எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
நாளை நேரடியாக இன்டர்வியூவில் பங்கேற்கலாம்! மாதசம்பளம் ரூ.31,000.. அழைக்கும் சென்னை சிஎல்ஆர்ஐ 2 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஒரு தொகுதி போதும் என்று தான் கூறியதாகவும், பாஜக தான் 2 தொகுதிகளில் போட்டியிடுங்கள் என்று வலியுறுத்தி 2 சீட்களை அளித்துள்ளதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 1 சீட் தான் கேட்டோம் – தினகரன்: மேலும், “பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ‘அணில்’ போல் செயல்படும்.
திமுக அரசின் பொய் பிரச்சாரங்களை வீடு வீடாக சென்று முறியடிப்போம். நாங்கள் கேட்ட தொகுதிகள் எங்களுக்கு தரப்பட்டுள்ளது. முதலில் பாஜக எங்களுக்கு அதிக தொகுதிகளை கொடுத்தார்கள். கூட்டணியில் நிறைய கட்சிகள் இணைந்துள்ளதால் தற்போது குறைத்து கொடுத்துள்ளார்கள். ஒரு தொகுதி போதும் என்றுதான் கூறினேன். குறைந்தபட்சம் 2 தொகுதிகளிலாவது போட்டியிடுங்கள் என்று பாஜக கூறியது. வேட்புமனுவுடன்.. மருத்துவ பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமா? தேர்தல் ஆணையம் விளக்கம் குக்கர் சின்னத்தில்: போதும் என்ற மனநிலை இருந்ததால் 2 தொகுதிகளை மட்டும் பெற்றுக் கொண்டோம்.
எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதை பாஜக தலைமை அறிவிக்கும். அதன் பிறகு அமமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். 2 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் அமமுக போட்டியிடும். மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும். நான் தேனியில் போட்டியிட வேண்டும் என்பது எங்கள் கட்சியினரின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. டெல்டா தொகுதியில் போட்டியிடவே எனக்கு விருப்பம். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடத் தான் எங்கள் கட்சி நிர்வாகிகள் விரும்புகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன்.
ஓபிஎஸ், தமாகா: ஏற்கனவே பாஜக – பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பாமகவுக்கு 10 சீட்களை ஒதுக்கியுள்ளது பாஜக. மேலும் சிறிய கட்சிகளுக்கும் சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்று அமமுகவுக்கு 2 சீட்கள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், தமாக மற்றும் ஓபிஎஸ் அணியினருடனும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தத்தை உறுதி செய்ய இருக்கிறது பாஜக. அதைத்தொடர்ந்து, கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது அறிவிக்கப்படும். அதன் பின்னர் பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..