வேலூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளராக மீண்டும் கதிர் ஆனந்த் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இதையொட்டி, இன்றைய தினம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் அலுவலகத்தை கதிர் ஆனந்தின் தந்தையும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் துரைமுருகன் பேசும்போது, ‘‘இத்தனை ஆண்டுகாலம் அரசியலில் இருந்துவிட்டேன். ஒரே தொகுதியில் நின்றோம்; வென்றோம்; அதோடு போனோம் என்று கருதிக்கொண்டிருக்கிறவன் நான். நல்லப்பெயருடன் போக வேண்டும். மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கி இந்தியா போய்க்கொண்டிருக்கிறது. இந்த நாட்டில் ஜனநாயகத்தின் குரல்வலையை நெரிக்கின்ற காரியத்தை மத்திய அரசு செய்துகொண்டிருக்கிறது.
இன்னொருப் பக்கம் சிறுபான்மையினரின் உயிரை எடுப்பதற்கான சட்டங்களை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. வடகொரியாவில் நடப்பதுபோல ஒரு ஆட்சி நடைபெற வேண்டும் என்று கருதுகிறார்கள். இந்த முறை நீங்கள் போடுகின்ற ஓட்டு ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக போடுகின்ற ஓட்டு. நான் மிசாவில் சிறைச் சென்றபோது, என் மகன் கதிர் ஆனந்த் ஒரு வயது குழந்தை. என்னை வண்டியில் ஏற்றியபோது, என் சட்டையை பிடித்துக்கொண்டு ‘விடமாட்டேன்’ என்றார்.
விரல்களை பிடுங்கிப் போட்டுவிட்டு வண்டியில் ஏறிப் போனேன். மூன்று மாதங்களுக்குப் பிறகு என் மனைவி அவனைத் தூக்கிக்கொண்டு வந்தார். வாங்கி முத்தமிடப் போனேன். அங்கிருந்த வார்டன் சின்னக்குழந்தையின் பிஞ்சிக் கையை பிடுங்கியதோடு, என்னைப் பார்த்து ‘நீ ஒரு குற்றவாளி. ஒருவேளை மனம் பேதலித்து அந்தக் குழந்தையை கொன்னுட்டீனா’ என்றார்.
நண்பர்களே நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள். பிள்ளையைப் பெற்றவர்களுக்குத்தான் தெரியும், அந்த வேதனை. அதற்குப் பிறகு ஓராண்டுக் காலம் என் மகனை நான் தொடவே இல்லை. அவ்வளவுத் தியாகம் செய்திருக்கிறேன்’’ என்றார் கண்ணீர் ததும்ப. இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், ‘‘எங்கள் வேட்பாளரையே கைது செய்யச்சொல்லி, இங்கு செல்வாக்குப் பெற்ற ஒரு வேட்பாளராக நிற்பவர் மத்தியில் சொல்லியிருக்கிறார். மேலிடத்தில் இருந்து எனக்கு அந்த செய்திகள் வந்தன. அதைப் பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை’’ என்றார்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..