• Sun. Oct 19th, 2025

முதலமைச்சர் பிரதமரை சந்தித்து வெள்ள நிவாரண நிதி தொடர்பான கோரிக்கை…

Byமு.மு

Dec 20, 2023
முதலமைச்சர் பிரதமரை சந்தித்து வெள்ள நிவாரண நிதி தொடர்பான கோரிக்கை

மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் சந்தித்து, மிக்ஜாம் புயல் கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியும், தென் மாவட்டங்களில் தற்போது பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்து, அப்பாதிப்புகளை சீரமமைத்திட தேவையான நிதியினை விரைந்து ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று கோரிக்கை மனுவினை அளித்து கேட்டுக் கொண்டார்.