தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் 30ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, பூந்தமல்லியில் நேற்று மாலை 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் ஊக்கத்தொகை பரிசளிக்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பூந்தமல்லி நகரத் தலைவர் பாரக் பாஷா தலைமை தாங்கினார். நகர செயலாளர் சலீம் வரவேற்றார். மாவட்ட தலைவர் ஷேக் தாவூத், மாவட்ட செயலாளர் நூர் முகமது, மாநில அமைப்பு செயலாளர் மாயவரம் அமீன், மாவட்ட நிர்வாகிகள் அஸ்காப், அக்பர், அப்துல் அஜீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தமமுக மாநில தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ பங்கேற்று, மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி சிறப்புரையாற்றினார். பின்னர் நிருபர்களிடம் ஜவாஹிருல்லா கூறியதாவது: தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின், புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றவர்களுக்கு எங்களின் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மாநிலங்களின் உரிமைகளை குழிதோண்டி புதைக்கக்கூடிய திட்டம். இதை தனது உரையில் முதல்வர் கூறியதை வரவேற்கிறோம்.
வக்ஃப் வாரிய சட்டத்திருத்த உத்தேச மசோதா குறித்து இஸ்லாமிய அமைப்புகளிடம் கருத்து கேட்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தவறான கருத்துகளை கூறுகிறார். இக்கூட்டத்தில் பங்கேற்க கூடியவர்களை தமிழக அரசு முடிவு செய்வதில்லை. நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை குழுதான் முடிவு செய்கிறது. தமிழக எம்எல்ஏ, எம்பிக்கள், ஜமாத், முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் கருத்து கேட்புக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டனர். இதன்மூலம் எடப்பாடி பழனிச்சாமியின் கருத்து தவறானது என்று உறுதி கூறுகிறேன். இவ்வாறு ஜவாஹிருல்லா எம்எல்ஏ தெரிவித்தார். இதில் பூந்தமல்லி நகரமன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணை தலைவர் ஸ்ரீதர், திமுக மாவட்ட பிரதிநிதி லயன் சுதாகர், நகரமன்ற உறுப்பினர்கள் மெஹராஜ் ஷேக் தாவூத், கவிதா சுரேஷ், ஏஎஸ்ஆர்.சுரேஷ், காஜாமைதீன், சேக்மைதீன், அசார் அகமது, ஹாஜா, பேட்டை அப்பாஸ், வசிஅகமது உள்பட ஏராளமான மாணவ-மாணவிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..