சென்னை குறளகத்தில், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய அலுவலகத்தில் மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் இராணிப்பேட்டை ஆர்.காந்தி அவர்கள் கதர்கிராம தொழில் வாரியத்தின் சார்பில் “காதி கிராப்ட் மலைத் தேன்”- ஐ அறிமுகப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ்,இ.ஆ.ப., தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய தலைமைச் செயல் அலுவலர் முனைவர் சீ.சுரேஷ்குமார், இ.ஆ.ப., மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.