மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (13.12.2023) தலைமைச் செயலகத்தில், டால்மியா குழுமத்தின் தலைவர் மற்றும் செயல் இயக்குநர் திரு. அர்மித் சிங் சேத்தி அவர்கள் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். உடன் மாண்புமிகு தொழில், முதலிட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, டால்மியா குழுமத்தின் செயல் இயக்குநர் திரு. கே. விநாயகமூர்த்தி, திரு. கே. இராமநாதன் ஆகியோர் உள்ளனர்.