சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் Umagine TN 2024 எனும் தகவல் தொழில்நுட்ப மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான துவக்க நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அப்போது முதல்வர் பேசுகையில், தமிழகத்தின் நவீன தகவல் தொழில்நுட்ப உலகின் சிற்பி கலைஞர் கருணாநிதி தான். அவரது ஆட்சி காலத்தில் தான் தமிழகத்தில் ஐடி துறை உருவாக்கப்பட்டது. அவரது காலம் எப்படி ஐடி துறைக்கு பொற்காலமாக இருந்ததோ, அதே போல் திராவிட மாடல் ஆட்சி காலம் அனைவருக்குமான பொற்கால ஆட்சியாக இருக்கும்.
இந்த துறையின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை எதற்காக நிதித்துறையில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறைக்கு மாற்றினேன் என்றால், அவர் நிதித்துறையில் செய்த பல்வேறு மாற்றங்கள் மூலம் நிதித்துறை வளர்ந்தது போல தகவல் தொழில்நுட்ப துறையும் வளரவேண்டும் என்று தான் அவர் இந்த துறைக்கு மாற்றினேன்.
எனக்கு இரண்டு குறிக்கோள்கள் உள்ளன. ஒன்று தமிழக பொருளாதாரம் 1 டிரில்லியன் அளவுக்கு உயர வேண்டும். அதே போல உலக மனிதவள தலைமையகமாக தமிழ்நாடு இருக்க வேண்டும் என்பதே எனது இரண்டு குறிக்கோள்கள். வளர்ச்சி என்பது வெறும் எண்களை மட்டும் வைத்து கூறப்படுவது இல்லை. அது மக்களின் வாழ்க்கை தரம் உயர்வது பற்றியது.
ஐடி துறை வளர்ச்சி என்பது நம் கண்முண்ணே கண்டு வருகிறோம். செயற்கை நுண்ணறிவு குறித்த மாநாட்டை தமிழகத்தில் நடத்தி முடித்துள்ளோம். தமிழகத்தில் 5ஜி தொழில்நுட்பத்தை சென்றாண்டு முதல் செயல்படுத்தி வருகிறோம். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியை மேம்படுத்தியுள்ளோம்.
தமிழகத்தில் தற்போது மொத்தம் 32 ஆயிரம் இசேவை மையம் உள்ளது. அதில், 25 ஆயிரம் இசேவை மையங்கள் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. சென்னையில் 1000 இடங்களில் wifi ஸ்பாட்கள் உள்ளன. சென்னையில் புதியதாக ஐடி துறை கம்பெனிகள் 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளன. கோவையில் தற்போது அதிக அளவில் ஐடி கம்பெனிகள் உருவாகி வருகின்றன.
புதியதாக நிறுவனம் தொடங்கும் நபர்களுக்கு கடன் வழங்க 5 கோடி ரூபாய் வரையில் ஒதுக்கப்பட்டள்ளது. கோவையில் 1100 கோடி ரூபாயில் 20 லட்சம் சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைய உள்ளது. மதுரையில் 340 கோடி ரூபாய் செலவிலும், திருச்சியிலும் புதிய ஐடி பார்க் அமைய உள்ளது என Umagine TN 2024 எனும் தகவல் தொழில்நுட்ப மாநாடு தொடக்க விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். இந்த மாநாடு இன்று மற்றும் நாளை என இரு தினங்கள் நடைபெற உள்ளது.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..