திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறை அதிகாரிகளை மாற்ற வேண்டும், வெளிமாநில அரசு ஊழியர்களையே தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும், பதற்றமான வாக்கு சாவடிகளில் மத்திய போலீஸ் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும், ஒரே கட்டமாக வாக்குப்பதிவையும், வாக்கு எண்ணிகையும் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளதாக அதிமுக கழக அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையர் தலைமையில் இன்று அனைத்து கட்சி பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் அதிமுக சார்பில் கழக அமைப்புச் செயலாளர் டி.ஜெயக்குமார், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை கலந்து கொண்டனர்.
பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜெயக்குமார், இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக தரப்பில் பங்கேற்று எழுத்துப்பூர்வமான கடிதத்தை கொடுத்து உள்ளோம் என்றார்.தேர்தல், நியாயமாகவும் ஜனநாயக முறையிலும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்ய சொல்லி எழுத்துப்பூர்வமான கடித்ததை கொடுத்துள்ளோம் என்றார்.
குறிப்பாக, வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் அனைத்தையும் முழுமையாக சரி செய்யவில்லை என்றும், தகுதியுள்ள வாக்காளர் பெயர்களை சேர்க்காமலும், இறந்தவர்கள் பெயரை நீக்காமலும் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறிந்து, கூடுதல் மத்திய காவல் படை நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக காவல்துறையினர் செயல்படுவதாகவும், துணை ராணுவ படை போலீசாரை தேர்தல் பணிக்கு பயன்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளோம் என்றார்.
சென்னையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பல வாக்குச்சாவடி மையங்கள் திமுகவினரால் கைப்பற்றப்பட்டு, கள்ள வாக்குகள் பதிவு செய்யப்பட்டதை நினைவுபடுத்தி தங்களது கோரிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையர்களிடம் முன் வைத்து உள்ளோம்.
தொடர்ந்து பேசிய அவர், ஆளும் கட்சிக்கு காவல் துறையினர் துதிபாடி கொண்டிருப்பதால், அவர்களுக்கு பதிலாக துணை ராணுவ படையினரை நியமிக்க வேண்டும் என்றும், பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடி பகுதிகளில் உள்ள அரசு அதிகாரிகளையும் மாற்ற வேண்டும்.
பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள், தண்டனையில் இருந்து கொண்டு பிணையில் வெளியே வந்திருப்பவர்களை அவர்களை முழுமையான முறையில் கண்காணித்து நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளதாகவும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மேலும், தேர்தல் பார்வையாளர்களாக, வெளி மாநிலத்தை சேர்ந்த ஊழியர்கள் நியமிக்கப்பட வேண்டும், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்பதையும், சிசிடிவி கேமராவை பொருத்தும் பணிக்கான டெண்டர் எடுக்கும் விவகாரத்தில் வெளிப்படை தன்மையோடு டெண்டர் நடத்தப்பட வேண்டும் என்பதையும், திமுக-வை சார்ந்தவர்களுக்கு சிசிடிவி கேமரா பொருத்தும் டெண்டர் ஒதுக்கினால் தேர்தல் வெளிப்படையாக நடைபெறுவதற்க்கான வாய்ப்பு இருக்காது என்பதை ஆதாரங்களுடன் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் குறிப்பிட்டார் .
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..