தமிழ்நாட்டில் இதுவரை அரசுப்பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 3,24,884 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 2,38,623 மாணவர்களும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 61,142 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். அரசு உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் 23,370 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.
2024-25-ம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது இந்த கல்வியாண்டு முடிவதற்கு முன்பாகவே 3.24லட்சம் மாணவர்கள் சேர்ந்திருப்பதாக பள்ளிகல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் பள்ளிகல்வித்துறையின் கீழ் தொடக்ககல்வியில் 31,336 பள்ளிகளும், பள்ளிகல்விதுறை இயக்குநரகத்தின் கீழ் 6,029 உயர்நிலைபள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்பது பொதுவாக ஜூன் மாதம் 1-ம் தேதி கல்வியாண்டு தொடக்கத்தில் நடைபெறும். இந்த நிலையில் தனியார்பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் முன்னெடுக்க கூடிய பல்வேறு நடவடிக்கைகளை மாணவர்களுக்கு தெரியபடுத்தி மாணவர் சேர்க்கையை ஒரு திருவிழாவாக நடத்த பள்ளிகல்வித்துறை முடிவு செய்தது. அதற்கான சுற்றறிக்கை அனுப்பபட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மிககுறிபாக அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கொடுக்க கூடிய காலைஉணவுதிட்டம், சீருடை, உயர்கல்விக்கான வாய்ப்புகள், உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்படுகிறது. இதனை மக்களிடையே கொண்டு சென்று மாணவர் சேர்க்கையை அதிகபடுத்த வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கபட்டது. அதன்படி மார்ச் 1-ம் தேதி மாணவர் சேர்க்கை திருவிழா என்பது தொடங்கபட்டது.
மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள்ளாக மாணவர் சேர்க்கையை 3 லட்சமாக இலக்கை எட்டவேண்டும் என்று இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி 3லட்சத்து 29 மாணவர்கள் சேர்ந்ததாக பள்ளிகல்வித்துறை தகவல் தெரிவித்திருந்தது. பொதுவாக ஆகஸ்ட் மாதம் வரை மாணவர் சேர்க்கை நடைபெறகூடிய நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதற்குள்ளாகவே சுமார் 3.24 லட்சம் மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்திருப்பதாக பள்ளிகல்விதுறை தகவல் தெரிவித்துள்ளது.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..