• Sun. Oct 19th, 2025

மக்களுக்கு துரோகம் இழைத்தது போலவே பாலாறு விவகாரத்திலும் செயலற்ற நிலையில் இருப்பது கண்டனத்திற்குறியது-எடப்பாடி கே பழனிசாமி

Byமு.மு

Feb 26, 2024
விடியா திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி கண்டனம்

ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டவுள்ள ஆந்திர மாநில அரசுக்கும், தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ச்சியாக அண்டை மாநிலங்களுக்கு தாரைவார்த்துக் கொண்டிருக்கும் இந்த விடியா திமுக அரசின் முதல்வருக்கும் எனது கடும் கண்டனங்கள்.

சர்வதேச நதிநீர் பங்கீடு கொள்கையின்படி நதியின் கீழ்ப் பகுதியில் இருக்கும் மாநிலங்களுக்கே நதிநீரின் பங்கீட்டில் அதிக உரிமை உள்ளது. 222 கிலோமீட்டர் தூரம் தமிழ்நாட்டில் செல்லும் பாலாற்று நீரை, வெறும் 33 கிலோமீட்டர்களுக்கு பாலாறு நீர்வழியைக் கொண்டிருக்கும் ஆந்திர மாநிலம் ஏற்கனவே 22 தடுப்பணைகள் கொண்டு தடுத்திருக்கும் நிலையில், தற்போது மீண்டும் தடுப்பணை கட்ட அடிக்கல் நாட்டுவது அனுமதிக்க இயலாத செயலாகும்.

இதனை உரிமையோடு நின்று குரல் கொடுத்து தடுக்க வேண்டிய தமிழ்நாடு அரசு, இந்த விடியா திமுக ஆட்சியில் மேகதாது விவகாரத்தில் மவுனியாக இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்தது போலவே பாலாறு விவகாரத்திலும் செயலற்ற நிலையில் இருப்பது கண்டனத்திற்குறியது.

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் வடமாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசனத் தேவைகளுக்கு பெரும் பங்கு வகிக்கும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திர அரசின் செயலை உரிய சட்ட நடவடிக்கை மூலம் தடுத்து நிறுத்தி, தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் பாலைவனங்களாக மாறாமல் இருப்பதை உறுதிசெய்யுமாறு இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.