தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு கடந்த 11 ஆண்டுகளாக பதவி உயர்வு மறுக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான புதிய பரிந்துரையை பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் ஆணையர் அனுப்பியும் அதன் மீது இதுவரை முடிவெடுக்காமல் தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
தமிழ்நாடு அரசின் முதன்மைத் துறைகளில் ஒன்றான திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் நிர்வாகம் மற்றும் கணக்குப் பிரிவுகளில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பதவி உயர்வு கடந்த 2013&ஆம் ஆண்டில் ரத்து செய்யப்பட்டது. அதனால், அத்துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் கடந்த 11 ஆண்டுகளாக பதவி உயர்வு பெற முடியாமல் எழுத்தர்களாகவே பணியாற்றி வருகின்றனர்.
அரசுத்துறையில் பணியில் சேருவது என்பது மிகவும் கடினமானதாகவும், அதிசயமானதாகவும் மாறி வரும் இந்தக் காலத்தில், பலரும் போட்டிப்போட்டிக் கொண்டு தேர்வுகளை எழுதி அரசுத்துறை பணிகளில் சேருவதற்கான முதன்மைக் காரணங்களில் ஒன்று அதில் கிடைக்கும் பதவி உயர்வு தான். பல்வேறு அரசுத் துறைகளில் எழுத்தராக சேரும் பணியாளர்களில் பலர் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்று ஓய்வு பெறுகின்றனர். பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையிலும் அதேநிலை தான் இருந்தது. ஆனால், 2013&ஆம் ஆண்டில் அத்துறையின் அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு ரத்து செய்யப்பட்டது. இது அவர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய சமூக அநீதி ஆகும்.
பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் எழுத்தர்களாக பணியில் சேருபவர்கள் 35 ஆண்டுகள் வரை பணியாற்றியும் பதவி உயர்வு பெறாமல் எழுத்தர்களாகவே ஓய்வு பெறுவது மிகப்பெரிய கொடுமை ஆகும். கடந்த பத்தாண்டுகளில் சுமார் 40 பேர் இத்துறையில் எழுத்தர்களாகவே ஓய்வு பெற்றுள்ளனர் என்பதே அவர்களுக்கு செய்யப்படும் துரோகம் ஆகும். இந்தத் துரோகம் களையப்பட வேண்டும், 11 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வரும் பதவி உயர்வு தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பது தான் அமைச்சுப் பணியாளர்களின் கோரிக்கை ஆகும். ஆனால், நியாயமான அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை நியாயப்படுத்த முடியாது.
பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வாய்ப்பை மீண்டும் வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. இன்னும் கேட்டால், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் ஆணையராக 2013&ஆம் ஆண்டு முதல் 2023&ஆம் ஆண்டு வரை பணியாற்றிய வெ. இறையன்பு, தமது துறையின் அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கும் நோக்குடன், அவர்களுக்கான 52 பணியிடங்களை பதவி உயர்வு பணியிடங்களாக மாற்றலாம் என்று 30.12.2021 நாளிட்ட 38703/ணி1/2017 என்ற எண் கொண்ட கடிதத்தின் மூலம் அரசுக்கு பரிந்துரை அளித்திருக்கிறார்.
இறையன்பு அவர்களுக்குப் பிறகு பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் இயக்குனராக பொறுப்பு ஏற்ற கணேஷ், இறையன்பு அளித்த பரிந்துரையை செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 17.11.2023ஆம் நாள் நிதித்துறை செயலருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பியுள்ளார். அதைத்தொடர்ந்து 20.11.2023&ஆம் நாள் அமைச்சுப் பணியாளர்கள் சார்பிலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சுப் பணியாளர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதியரசர் இளந்திரையன், அமைச்சுப் பணியாளர்களின் பதவி உயர்வு தொடர்பாக இறையன்பு அளித்த பரிந்துரை குறித்து 12 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக அரசின் நிதித்துறை முதன்மைச் செயலாளருக்கு கடந்த ஜனவரி 4&ஆம் தேதி ஆணையிட்டிருந்தார். அதன்பின் 8 வாரங்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், இறையன்பு பரிந்துரையை அரசு இன்னும் ஆய்வு கூட செய்யவில்லை.
இறையன்பு பரிந்துரையை செயல்படுத்துவதால் தமிழக அரசுக்கு கூடுதல் செலவு எதுவும் ஏற்படாது. இன்னும் கேட்டால், பொருளியல் & புள்ளியியல் துறையில் 52 பணியிடங்களை பதவி உயர்வு பணியிடங்களாக மாற்றுவதன் மூலம் அரசுக்கு ரூ.6.47 லட்சம் மிச்சமாகும். எனவே, இனியும் தாமதிக்காமல் இறையன்பு பரிந்துரைக்கு ஒப்புதல் அளிப்பதன் மூலம் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..