தேனி மாவட்டம் 18ம் கால்வாயில் (பழனிவேல் ராஜன் கால்வாய்) கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 98 கனஅடி வீதம் 30 நாட்களுக்கு 255 மில்லியன் கன அடி தண்ணீரினை 19.12.2023 முதல் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தைப் பொறுத்து, தேவைக்கேற்ப திறந்துவிட ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தேனி மாவட்டத்தில் 4614.25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
அரசு கூடுதல் தலைமை செயலாளர்
நீர்வளத்துறை