• Thu. Oct 23rd, 2025

நீர்ப்பறவை கணக்கெடுப்பு முடிந்தது!.

Byமு.மு

Feb 8, 2024
நீர்ப்பறவை கணக்கெடுப்பு முடிந்தது

தமிழ்நாட்டில் ஈரநில பறவைகள் குறித்த மதிப்பீடு

                வனத் துறையால் நடத்தப்பட்ட 2024-ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பறவைகள் மதிப்பீட்டின் புள்ளிவிவரம் தமிழ்நாடு அரசு வெளியிட்டது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும், 2024 ஜனவரி 27 மற்றும் 28 தேதிகளில் 894 சதுப்பு நிலங்கள் / நீர்நிலைகள் / பறவைகள் சரணாலயங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மதிப்பீடு நடத்தப்பட்டது.

வனப்பகுதிகளில் 179, கிராமப்புறங்களில் 555 மற்றும் நகர்ப்புறங்களில் 170 என மொத்தம் 894 முனையங்களில் மதிப்பீடு செய்யப்பட்டன. இந்த ஆண்டு 389 பறவை இனங்களுடன் ஒருங்கிணைந்த மதிப்பீடு செய்யப்பட்ட மொத்த பறவைகளின் எண்ணிக்கை 6,80,028 ஆகும்.  அவற்றில் 120 இனங்கள் நீர்ப்பறவைகள், மீதமுள்ள 269 நிலப்பறவை இனங்கள் ஆகும்.

                மொத்த பறவை எண்ணிக்கையான 6,80,028 இல் 79% நீர்ப்பறவைகள் (5,36,245) மற்றும் 21% நிலப்பறவைகள் (1,43,783) என மதிப்பிடப்பட்டுள்ளது. நீர் பறவைகள் பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வ.எண்.நீர்ப்பறவை இனத்தின் பெயர்இனத்தின் எண்ணிக்கை
(1)(2)(3) 
நேரடி கணக்கெடுப்பு 
1.நீர்வாத்து69913 
2.பூநாரை28822 
3.முக்குளிப்பான்கள்6789 
4.கடற்கரை பறவை19919 
5.கடற்புறா, ஆலா வகைகள்173294 
6.பெருங்கொக்குகள்,17865 
7.பாம்பு தாரா மற்றும் நீர்க் காகங்கள்54008 
8.கூழைக்கடா, நாரை, கொக்குகள், அரிவாள்மூக்கன் மற்றும் கரண்டிவாயன் வகைகள்165635 
மொத்தம்536245 

                6450 தன்னார்வலர்கள், பறவை ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் வனத் துறையைச் சேர்ந்த 3350 பணியாளர்கள் என மொத்தம் 9800 நபர்கள் இந்த மதிப்பீட்டில் பங்கேற்றனர். மாநில அளவிலான ஒருங்கிணைந்த ஈரநிலப் பறவைகள் மதிப்பீடு முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினப் பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ்.ரா.ரெட்டி அவர்களின் மேற்பார்வையிலும், ராகேஷ் குமார் டோக்ரா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (புலிகள் திட்டம்), முனைவர்.வீ.நாகநாதன், கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர் (வன உயிரினம்) மற்றும் அ.ஷர்மிலி, உதவி வனப்பாதுகாவலர் (வன உயிரினம்) ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டு இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.