• Sun. Oct 19th, 2025

வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தடயவியல்!.. சான்றிதழ்களை வழங்கினார் அமைச்சர்…

Byமு.மு

Dec 15, 2023
வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தடயவியல்!.. சான்றிதழ்களை வழங்கினார் அமைச்சர்

வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தடயவியல் நிறைவு விழாவில் கலந்துகொண்டு மாண்புமிகு வனத்துறை அமைச்சர் மருத்துவர். மா.மதிவேந்தன் அவர்கள் பயிற்சியினை நிறைவு செய்த 20 வனச்சரக அலுவலர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

இன்று 15.12.2023 உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் (ஆராய்ச்சி, பயிற்சி மற்றும் கல்வி) வண்டலூரில் அமைந்துள்ள அரங்கில் மாண்புமிகு வனத்துறை அமைச்சர்  மருத்துவர். மா.மதிவேந்தன் அவர்கள் தலைமையில் வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தடயவியல் குறித்த 16.11.2023 முதல் 15.12.2023 வரை நடைப்பெற்ற பயிற்சி நிறைவுவை முன்னிட்டு பயிற்சி நிறைவு விழா நடைப்பெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்டு மாண்புமிகு வனத்துறை அமைச்சர்  மருத்துவர். மா.மதிவேந்தன் அவர்கள் பேசுகையில்,

மேற்குத் தொடர்ச்சி மலைகள், கிழக்குத் தொடர்ச்சி மலைகள், சமவெளிகள் மற்றும் கடலோரப் பகுதிகளின் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளால் வகைப்படுத்தப்படும் அதன் வளமான பல்லுயிர் பெருக்கத்திற்காக தமிழ்நாடு அறியப்படுகிறது.

காடுகள், சதுப்பு நிலங்கள் மற்றும் புல்வெளிகள் போன்ற பல்வேறு வாழ்விடங்களை நம் மாநிலம் உள்ளடக்கியது.  பரந்த அளவிலான தாவர மற்றும் விலங்கு இனங்களை பெற்றுள்ளது. ஏராளமான வனவிலங்கு சரணாலயங்கள்இ தேசியப் பூங்காக்கள், பாதுகாப்புக் காப்பகங்கள், புலிகள் காப்பகங்கள், யானைகள் காப்பகங்கள் மற்றும் உயிர்க்கோளக் காப்பகங்கள் ஆகியவற்றை நிறுவுவதன் மூலம் தமிழ்நாட்டின் பல்லுயிர் பெருக்கம் அங்கீகரிக்கப்பட்டு நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் உறுதியான மற்றும் புலனாகாத சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகளை வழங்குவதற்கு பங்களிக்கின்றன. அவை தமிழ்நாடு மாநிலத்தின் செழுமைக்கு முக்கியமானவை. இந்த வளமான பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க நமது அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளது.

உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் அக்டோபர் 2017 இல் நிறுவப்பட்டது. மற்றும் இது தமிழ்நாடு வனத்துறையால் அமைக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் நாட்டின் பல மாநிலங்களால் பாராட்டப்பட்டதோடு மட்டுமல்லமால் அவர்களில் பலர் தங்கள் மாநிலங்களில் அத்தகைய நிறுவனத்தை நிறுவுவதைப் பிரதிபலிக்க முயற்சித்து வருகிறார்கள்.

வனவிலங்கு தடயவியல் துறையில் யுஐறுஊ மேற்கொண்டுள்ள முன்னேற்றங்கள்இ தமிழகத்தில் வனவிலங்கு சட்டத்தை அமலாக்க பெரிய அளவில் உதவியுள்ளன.

சமீபத்தில் கர்நாடகாவின் தடயவியல் ஆய்வகம் மற்றும் வனத் துறையின் பல அதிகாரிகள் AIWC-க்கு வருகை புரிந்து கர்நாடகாவில் இதேபோன்ற வனவிலங்கு தடயவியல் வசதியை நிறுவ இங்கு வந்து அதன் மாதிரியை ஆய்வு செய்து சென்றுள்ளனர்.  இது AIWC–யின் மிகப் பெரிய வெற்றியைக் காட்டுகிறது.

வனத் துறையின் முன்னணி ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி வனவிலங்கு பாதுகாப்பு ஊழியர்களின் திறனை வளர்ப்பதற்காக இந்த நிறுவனம் பல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது.

முதன்முறையாக “வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தடயவியல்” என்ற தலைப்பில் பணியாற்றும் வனச் சரக அதிகாரிகளுக்கு ஒரு மாத சான்றிதழ் படிப்பை நடத்துவதற்காக  உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்திற்கு அரசாங்கம் நிதியை அனுமதித்துள்ளது.

மாநிலத்தின் பல்வேறு வன மற்றும் வனவிலங்குப் பிரிவுகளைச் சேர்ந்த 20 வனச் சரக அலுவலர்கள் பயிற்சியை மேற்கொண்டு வெற்றிகரமாக முடித்துள்ளனர்.

இந்த ஒரு மாத காலப்பகுதியில் வனச்சரக அலுவலர்கள் மிகவும் கவனமாகவும் ஆழ்ந்த ஈடுப்பாட்டுடன் கற்றறிந்தனர் என்பதை தான் உறுதியாக நம்புவதாக   தெரிவித்தார்.

வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தடயவியல் ஆகியவற்றின் சிக்கலான சவால்களுக்கு தேவையான அறிவு மற்றும் திறன்களுடன் நமது வனத்துறை அதிகாரிகளை மேம்படுத்துவதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கு இந்த பாடநெறி ஒரு சான்றாகும்.

வனச்சரக அலுவலர்கள் பல்வேறு தொகுதிகளில் ஆய்வு செய்து பாதுகாப்பு சூழலியல்இ வனவிலங்கு மேலாண்மைஇ கொள்கைகள் மற்றும் சட்டங்கள், சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகம், வனவிலங்கு தடயவியல் மற்றும் சரணாலய வனவிலங்குகள் குறித்து களப் பயணம் பற்றிய நுண்ணறிவுகளைப் பெற்றுள்ளனர்.

இந்த பாடத்திட்டத்தின் மூலம்இ இருபது வனச்சரக அலுவலர்கள் முக்கியமான திறமைகள் மற்றும் அறிவின் தொகுப்பைப் பெற்றுள்ளனர்.

இது வனத் துறையில் மேற்கண்ட சவால்களை அணுகும் விதத்தை சந்தேகத்திற்கு இடமின்றி வடிவமைக்கும். மேலும்அவர்கள் தங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் கற்றலைப் பெருக்கவும் முடியும் என்றும் தெரிவித்தார்.

கேரள வனத் துறையின் பல்வேறு வகையான வனவிலங்கு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நுட்பங்கள் மற்றும் அவர்களின் பங்களிப்பை வனச்சரக அதிகாரிகள் வெளிப்படுத்தியதில் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.

புதிய யோசனைகள் மற்றும் அணுகுமுறைகளுக்கு நம் மனம் திறந்திருக்க வேண்டும் அதனால் நாம் சிறந்த முறையில் செயல்பட முடியும்;. வனத்துறையில் உள்ள பல்வேறு நிலை அலுவலர்கள் பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்குச் செல்ல தற்போதைய அரசு பல பயிற்சித் திட்டங்களையும் ஆய்வுப் பயணங்களையும் அனுமதித்துள்ளது.

இது அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அவர்களின் அன்றாடச் செயல்பாட்டில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் பாடத்திலிருந்து கற்றல் மிக அதிகமாக இருக்க வேண்டும் என்றும் வனச்சரக அலுவலர்கள் பாடத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் தான் AIWC-யின் இயக்குநரிடம் தெரிவித்தாகவும் அதை திறம்பட நிறைவேற்றியது கண்டு தான் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்ததார்.

இந்தத் திட்டத்தின் வெற்றியானது நாங்கள் வழங்கவிருக்கும் நிறைவுச் சான்றிதழால் மட்டும் அளவிடப்படாமல் இந்த ஒரு மாதப் பயணத்தில் ஒவ்வொரு அதிகாரியும் வெளிப்படுத்திய ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பினால் அளவிடப்படுகிறது. வனச்சரக அலுவலகர்கள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டி சிறப்பாக செயல்பட்டதாக யுஐறுஊ அதிகாரிகள் மூலம் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார்.

இறுதியாக இந்த பயிற்சிக்குத் தேவையான நிதியை அனுமதித்து இந்தப் படிப்பை ஏற்படுத்திய மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் தனது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தக்கொண்டார்.

இந்தப் பாடத்தின் உண்மையான வெற்றி என்பது பெற்ற அறிவில் மட்டுமல்ல அந்த அறிவை துறையில் பயன்படுத்துவதில் உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நமது வனச்சரக அலுவலர்கள் இங்கு கற்றுக்கொண்ட பாடங்களை எடுத்து அவற்றை விடாமுயற்சியுடன் செயல்படுத்தி, நமது அழகிய தமிழ்நாட்டில் வனவிலங்கு பாதுகாப்புக்கான தொடர்ச்சியான முயற்சிகளுக்கு பங்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

இவ்விழாவில் முதன்மை  தலைமை வனப் பாதுகாவலர் (வனத்துறை தலைவர்) திரு.சுப்ரத் மொஹபத்ரா, இ.வ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினப் காப்பாளர்- திரு. சீனிவாச ஆர் ரெட்டி, இ.வ.ப.,  முதன்மை தலைமை வனப் பாதுகாவலர்  மற்றும் இயக்குனர் – திரு. உதயன், இ.வ.ப.,  தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கூடுதல் இயக்குநர்-திரு.நிகார் ரஞ்சன், இ.வ.ப.,   துணை இயக்குநர் திரு.மா.கோ.கணேசன், விஞ்ஞானி நிலை ‘சி’ முனைவர்.அ.மணிமொழி, உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனம் மற்றும், தமிழ்நாடு வனத் துறையின் மற்ற மூத்த அதிகாரிகள்  கலந்துகொண்டனார்.