விண்வெளியில் மனிதர்கள் நடக்கும் முதல் வணிக ரீதியிலான திட்டத்தை வெற்றிகரமாக நிகழ்த்தி எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது. விண்வெளிக்கு செல்லும் ஒரு வீரர் தான் சென்ற விண்கலத்தை விட்டு வெளியே வந்து விண்ணில் மேற்கொள்ளும் செயல்பாடுகளை விண்வெளி நடை என்று அழைக்கப்படுகிறது. கடந்த 1965ஆம் ஆண்டு முதல் தற்போது வரை விண்வெளி வீரர்கள் விண்வெளியில் நடந்து சாதனை படைத்துள்ளனர்.
இவை அனைத்தும் ஆய்வு நோக்கத்திற்கானவை ஆனால் விண்வெளி வீரர் அல்லாத பொதுமக்களை விண்வெளியில் நடக்க வைக்கும் திட்டத்தை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாத்தியப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ராக்கெட்டில் அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் ஜாரக் ஐசக், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பொறியாளர் சாரா கிலிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்த அன்னா மேனோன், விண்கலத்தின் பைலட் ஆன ஸ்கார் போடீட் ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை விண்வெளிக்கு புறப்பட்டனர்.
டிராகன் விண்கலம் மூலம் சுமார் 1400 கிலோ மீட்டர் உயரத்திற்கு சென்ற நால்வரும் பின்னர் அங்கிருந்து படிப்படியாக இரங்கி 700 கிலோ மீட்டர் உயரத்தில் புவியின் சுற்றுவட்ட பாதையை சுற்றி வந்தனர். அங்கு விண்கலத்தில் இருந்து வெளியே வந்த தொழிலதிபர் ஜாரக் ஐசக் விண்வெளியில் சுமார் 15 நிமிடங்கள் நடந்தார். அவரை தொடர்ந்து மற்ற மூவரும் விண்வெளி நடையை மேற்கொண்டனர். 5 நாட்கள் விண்வெளியிலேயே செலவழித்த நால்வரும் 40 விதமான ஆய்வுகளை மேற்கொண்டனர்.
விண்வெளியில் இருக்கும் போது மனித உடலில் கதிர் இயக்கம் பரவுமா என்பது குறித்தும் மனித உடலில் நுண்ணிய புவி ஈர்ப்பு விசையின் தாக்கம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர். விண்கலத்தில் இருந்தபடி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன பொறியாளர் சாரா கிலிஸ் வயலின் இசைத்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த சாதனை பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு கேப்சூல் எனப்படும் சிறிய விண்கலம் மூலம் நால்வரும் பூமிக்கு திரும்பினர்.
பிளோரிடா மாகாணத்தில் உள்ள கடலில் பாராசூட்களின் உதவியோடு அந்த விண்கலம் பத்திரமாக விழுந்தது. போலாரிஸ் டாவ்ன் என்று பெயரிடப்பட்டு இந்த பயண திட்டத்தின் மூலம் பலநூறு கிலோமீட்டர் உயரத்தில் வணிக ரீதியிலான விண்வெளி நடை நிகழ்வை சாத்திய படுத்திய முதல் தனியார் ராக்கெட் நிறுவனம் என்ற சாதனையை எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் படைத்துள்ளது.
- அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணிமறைந்த தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் பங்கேற்றனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்… Read more: அண்ணா நினைவு நாளை முன்னிட்டு ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி
- ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசுதமிழகத்தில் சென்னை, கோவை உள்பட 6 இடங்களில் புதிதாக மகளிர் விடுதிகளை அமைப்பதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில், வெளி… Read more: ‘தோழி’ மகளிர் விடுதி திட்டம் – தமிழக அரசு
- கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னா செய்தார்க்கும் நன்மையே செய்யும் அன்பை விதைத்தவர்… Read more: கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!..
- சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..மனிதாபிமான உணர்வோடும், சேவை மனப்பான்மையோடும் வாழ்ந்து வருகிற கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இந்நன்னாளில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்… Read more: சகோதர, சகோதரிகளுக்கு செல்வப்பெருந்தகை கிறிஸ்துமஸ் தின வாழ்த்து!..
- மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!சென்னை மெரினாவில் உணவுத் திருவிழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை 65 சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் தயாரித்து… Read more: மெரினாவில் உணவுத் திருவிழா தொடக்கம்..!
- அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கேஅம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ச்சுன் கார்கே தெரிவித்தார். நிகழ்ந்த சம்பவம்… Read more: அம்பேத்கர் குறித்த தனது பேச்சை காங்கிரஸ் திரித்து வெளியிட்டதாக அமித் ஷா கூறியதில் துளியும் உண்மையில்லை: மல்லிகார்ஜுன் கார்கே
- அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா… Read more: அமைச்சர் தா.மோ.அன்பரசன் கடும் குற்றச்சாட்டு!..
- விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஒன்றிய குழு ஆய்வு செய்து வருகிறது. ஒன்றிய உள்துறை இணை இயக்குனர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட… Read more: விழுப்புரம் மாவட்டத்தில் புயல், மழை பாதிப்பை ஆய்வுசெய்கிறது ஒன்றிய குழு..!
- அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021ல் சிவசேனா -காங்கிரஸ்… Read more: அஜித் பவாரின் ரூ.1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை..!
- விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..யாதுமுணர்ந்தே தவிர்த்தோம், பகையின் சூதுமறிந்தே தகர்த்தோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை:அம்பேத்கர் குறித்து நூல் அம்பேத்கரின் நினைவு… Read more: விஜய் விழா பற்றி திருமாவளவன் அறிக்கை!..