• Mon. Oct 20th, 2025

கிருஷ்ணா கோதாவரி படுகையில் எண்ணெய் உற்பத்தி தொடங்கியதற்கு பிரதமர் பாராட்டு!

Byமு.மு

Jan 8, 2024
கிருஷ்ணா கோதாவரி படுகையில் எண்ணெய் உற்பத்தி தொடங்கியதற்கு பிரதமர் பாராட்டு

சிக்கலான, கடினமான ஆழமிக்க கிருஷ்ணா கோதாவரி படுகையிலிருந்து (வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ள கேஜி-டிடபிள்யூஎன்-98/2 பிளாக்) முதல் எண்ணெய் உற்பத்தி தொடங்கப்படுவதை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார்.

மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியின் சமூக ஊடக எக்ஸ் தள பதிவிற்குப் பிரதமர் பின்வருமாறு பதிலளித்துள்ளார்;

“இது இந்தியாவின் எரிசக்தி பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும், மேலும், தற்சார்பு இந்தியாவுக்கான நமது நோக்கத்தை அதிகரிக்கிறது. இது நமது பொருளாதாரத்திற்கும் பல நன்மைகளை ஏற்படுத்தும்”.