• Tue. Oct 21st, 2025

சென்னையில் வருமான வரிப் பிடித்தம் குறித்த விழிப்புணர்வு!.

Byமு.மு

Feb 7, 2024
சென்னையில் வருமான வரிப் பிடித்தம் குறித்த விழிப்புணர்வு

சென்னையில் உள்ள டிடிஎஸ் சரகம்-3-ன்  வருமானவரி கூடுதல்ஆணையர், எம். அர்ஜுன் மாணிக்  வழிகாட்டுதலின்படி,   வருமானவரித்துறை கூடுதல் ஆணையரகமும் செங்கல்பட்டு மாவட்ட தென்னிந்திய பட்டய கணக்காளர் குழுமமும் இணைந்து, வருமானவரிப்பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கருதரங்கை 06-02-2024 (செவ்வாய்) அன்று சென்னை தாம்பரத்தில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் நடத்தின.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய வருமானவரி துணை ஆணையர் ஆர்.ராஜமனோகர், அனைத்து உகந்த செலவீனம் செய்யும்போதும், உரிய விகிதத்தில்  வருமான வரிப்பிடித்தம் செய்யவேண்டிய அவசியம், வரிப்பிடித்தம் செய்த தொகையினை மத்திய அரசின் கணக்கில் காலத்தே செலுத்தவேண்டிய கட்டாயம், டிடிஎஸ் காலாண்டு படிவம் தாக்கல் செய்யவேண்டிய முக்கியத்துவம், வரிப்பிடித்தம் செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கவேண்டிய  தேவை ஆகியவை பற்றி விவரித்தார்.

வருமானவரி அலுவலர்கள் எல் ராஜாராமன்டி வி ஸ்ரீதர், கே செந்தில் குமார் ஆகியோர் வருமானவரி  சட்டத்தில் இடம்பெற்றுள்ள வரிப்பிடித்தம் செய்யவேண்டிய பிரிவுகளின் சாராம்சத்தை எடுத்துரைத்தனர்.  வரிப்பிடித்தம் செய்பவர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகளைப் பட்டியலிட்டனர்.  வரிப்பிடித்த விதிகளை சரியாகப் பின்பற்றவில்லை என்றால் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களையும் எடுத்துரைத்தனர். 

வருமானவரி ஆலோசகர் ஜானகி கார்த்திகேயன், ட்ரேசஸ் தளத்தில் , வரிப்பிடித்தம் செய்பவர்கள் கையாளவேண்டிய நடவடிக்கைகளை விளக்கினார். இந்தக் கருத்தரங்கத்தில் பல்வேறு தொழில் செய்யும் 80-க்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.